‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
நடிகை அஞ்சலி சில தினங்களுக்கு முன் ஐதராபாத்தில் உள்ள பப் ஒன்றில் குடித்து விட்டு போதையில் கலாட்டா செய்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால், தான் குடித்து விட்டு எந்த கலாட்டாவும் செய்யவில்லை என அஞ்சலி விளக்கமளித்துள்ளார்.
“வெளிநாட்டில் படப்பிடிப்பை முடித்து விட்டு ஐதராபாத்திற்கு சில தினங்களுக்கு முன்புதான் திரும்பினேன். கடந்த வெள்ளிக்கிழமையன்று எனது தோழிகளுடன் ரெஸ்டரென்ட் ஒன்றிற்கு சென்றேன். அப்போது சில புகைப்படக்கார்ர்கள் என்னை புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு நான் இது ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சி, அதனால் இங்கெல்லாம் புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டேன்.
அந்த ரெஸ்டரென்டில் நான் ஜுஸுக்குதான் ஆர்டர் கொடுத்தேன். அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் தொலைக்காட்சிகளில் நான் குடித்து விட்டு தகராறு செய்ததாக செய்திகள் வெளியாகின. அது ஆதாரமற்ற முற்றிலும் தவறான செய்தி. என்னுடைய இரண்டு தோழிகளும் அவர்களுடைய கணவர்களுடன் வந்திருந்தார்கள், நான் மட்டும் தனியாக வந்தேன். அப்படியிருக்க நான் பாய் பிரண்டுடன் வந்ததாக எப்படி செய்தி வெளியிடலாம். 15 நிமிடங்களுக்குள் அந்த இடத்தை விட்டு நான் சென்று விட்டேன். அதன் பின் யார் புகார் செய்தது, ஏன் போலீஸ் வந்தது என்பதெல்லாம் எனக்குத் தெரியாது,” என்று அஞ்சலி தெரிவித்துள்ளார்.
அஞ்சலி இதற்கு முன்னும் இதேபோல் பிரச்சனை செய்ததாக செய்திகள் வெளிவந்தன. திரும்பும் அம்மாதிரியான ஒரு செய்தி வெளியாகி, அதற்கு அஞ்சலியும் மறுப்பு தெரிவித்துள்ளார்.