அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால், லாலிசம் என்ற பெயரில் இசைக்குழு ஒன்றை துவக்கியுள்ளதும், வரும் ஜன-31ல் திருவனந்தபுரத்தில் நடைபெறவிருக்கும் தேசிய விளையாட்டு போட்டிகளின் துவக்கவிழா கொண்டாட்டத்தின் போது இதன் முதல்ஷோவை நடத்த இருக்கிறார் என்பதும் நமக்கு ஏற்கனவே தெரிந்த செய்திதான். ஆனால் இந்த விழாவில் தனது இசைக்குழு மூலமாக நிகழ்ச்சிகளை நடத்த கேரள அரசிடம், மோகன்லால் இரண்டுகோடி ரூபாய் கேட்டார் என ஒரு வதந்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது..ஆனால் இந்த வதந்தி பரவிய கொஞ்ச நேரத்திலேயே கேரள அரசு தரப்பிலிருந்து, மோகன்லால் அப்படி ஏதும் பணம் கேட்கவில்லையென உண்மையை விளக்கும் விதமாக பதில் அளிக்கப்பட்டதும் தான் பரபரப்பான நிலைமை சற்றே சீரானது. கேரளத்தில் உள்ள ஒரு மூன்றாம் தர இணையதளம் ஒன்றுதான் பரபரப்புக்காக இந்த செய்தியை வெளியிட்டதாகவும், அது மோகன்லாலுக்கு எதிராக வெறும் வாயை மென்று கொண்டிருந்தவர்களுக்கு அவல் கிடைத்தது போல ஆனதால் அந்த வதந்தியை அப்படியே அவர்கள் ஊதி பெரிதாக்கி விட்டதாகவும் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.