பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தெனாலிராமன் மெகாஹிட்டாகும். அதன்பிறகு நான் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று ரீ-என்ட்ரியில் பில்டப் கொடுத்து வந்தார் வைகைப்புயல் வடிவேலு. ஆனால், அந்த படம் ஓடாமல் அவரது எதிர்கால திட்டங்களுக்கு முட்டுக்கட்டைப் போட்டு விட்டது. இருப்பினும், மறுபடியும் அந்த படத்தை இயக்கிய யுவராஜின் இயக்கத்தில் ஒரு படத்தில் நாயகனாக நடிக்கயிருப்பதாக வரிந்து கட்டினார் வடிவேலு.
ஆனால், அந்த படத்தை தயாரிக்க யாரும முன்வரவில்லை. அதையடுத்து நீங்களே தயாரிப்பாளராகி விடுங்கள் என்று சிலர் சொன்னதற்கு, சொந்த காசில் சூன்யம் வைத்துக்கொள்ள நான் என்ன சினிமா தெரியாதவனா? என்று கூறிய வடிவேலு, இப்போது வரை தன்னை நம்பி எந்த தயாரிப்பாளரும் படம் தயாரிக்க முன்வராததால், கேமரா கண்களுக்கு காட்சி கொடுக்காமல் வீடே கதியென்று இருக்கிறார்.
இந்தநிலையில், காெடியனாக நடிக்க வந்த வாய்ப்புகளையும் தவிர்த்து விட்ட வடிவேலு, சமீபத்தில் தனது மகனின் திருமணத்தை மதுரையில் நடத்தியவர் அதற்கு எந்த சினிமாக்காரர்களையும் அழைக்கவில்லை. அதேபோல் இப்போது தன்னிடம் நீண்டகாலமாக பழகிய சினிமா நண்பர்கள் தங்களது படங்களின் ஆடியோ விழாக்களுக்கு அழைத்தால்கூட வர மறுக்கிறாராம் வடிவேலு. சினிமா சரிப்பட்டு வரவில்லை. அதனால் சினிமாவை விட்டு விலகியிருப்பதே நல்லது என்று நினைககிறேன் என்று சொல்லி விட்டு நழுவிக்கொள்கிறாராம்.