இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
மலையாளத்தில் ஹேப்பி தர்பார், பர்வீசா என பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் லட்சுமிமேனன். அந்த படங்களில் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹீரோயினாக நடித்திருக்கிறார். அதோடு நூற்றுக்கணக்கான விளம்பர படங்களிலும் நடித்திருக்கும் அவர், தற்போது தமிழில், நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஹீரோவாக நடித்து வரும் ஒரு பக்க கதை என்ற படத்தில் தமிழுக்கு என்ட்ரி ஆகியுள்ளார்.
ஆனால், தமிழில் லட்சுமிமேனன் என்ற பெயரில் ஒரு நடிகை இருப்பதால், தமிழுக்காக தனது பெயரை ப்ரியாமேனன் என்று மாற்றியுள்ள அவர், தற்போது ஒரு பக்க கதை படத்தின் படப்பிடிப்புக்காக சென்னை வந்து பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். பேட்டிக்காக அவரை சந்தித்தபோது, தமிழ் சினிமாவில் தான் நடிக்க விரும்பும் கதாபாத்திரங்கள் பற்றி மனம் திறந்து பேசினார்...
அபபோது அவர் கூறும்போது, இந்த ஒரு பக்க கதையில் நான் கதாநாயகி மேகா ஆகாஷின் அம்மாவாக நடிக்கிறேன். ஆனால் வயதான அம்மாவாக இல்லை. இளமையான அம்மாவாகத்தான் நடிக்கிறேன். எனது கேரக்டருக்கு கதையில் முக்கியத்துவம் இருந்ததால் அம்மா வேடம் என்றபோதும் தயங்காமல் ஏற்றுக்கொண்டேன். என்னைப்பொறுத்தவரை மலையாளத்தில் நடித்தது போல் தமிழிலும் ஹீரோயினியாகத்தான் நடிக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை. எந்த மாதிரியான கேரக்டர்கள் கிடைத்தாலும் எனக்கு பர்பார்மென்ஸ் பண்ண வாய்ப்பு இருந்தால் மறுக்காமல் நடிப்பேன்.
மலையாளத்தில்கூட ஜெயராம் நடித்த மாந்திரீகன் என்ற படத்தில் ஹீரோயினியின் அக்காவாக நடித்தேன். ஆனால் அந்த வேடத்துக்கு கதையில் முக்கியத்துவம் இருந்தது. அதனால் எனது நடிப்பும் பேசப்பட்டது. அதேபோல் தமிழ் படங்களிலும் கதையோடு ஒன்றி செல்லக்கூடிய அழுத்தமான கேரக்ட்ர்கள் எதுவாக இருந்தாலும் நடிப்பேன். கிளாமர் ரோல்கள் என்றால் மிதமான கிளாமரை மட்டுமே வெளிப்படுத்துவேன். ஷாட்ஸ்-டீசர்ட் போன்ற காஸ்டியூம்கள் அணிநது நடிப்பேன் என்று கூறும் ப்ரியாமேனனுக்கு தமிழில் அஜீத், விஜய், சூர்யா போன்றவர்களை ரொம்ப பிடிக்குமாம். அவர்களுடன் டூயட் பாட வேண்டும் என்ற ஆசைகூட உள்ளதாம். அதனால் அடுத்தடுத்து அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவேன் என்கிறார்.
ஒருவேளை ஹீரோயினி வாய்ப்புகள் கிடைக்காதபட்சத்தில் வித்தியாசமான ஆக்சன், அதிரடியான வேடங்களில் கவனத்தை திருப்பி விடுவேன். என்னைக்கேட்டால் ஆட்டம் பாட்டம் என்பதை விட பர்பாமென்ஸ் பண்ணக்கூடிய வேடங்களில் நல்ல ஸ்கோர் பண்ணுவேன். அதனால் அருந்ததி படத்தில் அனுஷ்கா நடித்தது போன்று அதிரடியான கதாபாத்திரங்கள் என்றால் எனக்கு அல்வா சாப்பிடுவது மாதிரிதான். அதனால் நூறு சதவிகிதம் எனது திறமையை வெளிக்கொண்டு வரும் வேடங்களை எதிர்பார்க்கிறேன்.
மேலும, தமிழில் அம்மா நடிகைகளில் சரண்யாவின் நடிப்பு எனக்கு ரொம்ப பிடிககும். அவர் நடித்த தென்மேற்கு பருவக்காற்று உளளிட்ட பல படங்களை ரொமப் ரசித்திருக்கிறேன். அதோடு, இப்போது நான் வயது குறைந்த நடிகையாக இருப்பதால் தொடர்ந்து என வயதுக்கு பொருத்தமான அதாவது ஒரு போலீஸ் ஆபீசர் வேடம், வெயிட்டான அக்கா வேடம், பேமிலியை காப்பாற்ற போராடும் வேடம் என நடிப்புத்திறமையை வெளிக்கொண்டு வரக்கூடிய கேரக்டர்களில் நடிப்பதற்கு முதலிடம் கொடுக்கப்போகிறேன்.