'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி இந்தாண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதில் இந்தி சினிமாவின் மெகா ஸ்டாராக இருக்கும் அமிதாப் பச்சன் மற்றும் திலீப்குமாருக்கு இருவரும் நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷண் விருதுக்கு தேர்வாகியுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த இசைக்கலைஞர் சுதா ரகுநாதன் பத்ம பூஷண் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆந்திராவை சேர்ந்த கோட்டா சீனிவாச ராவ் பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ளார். இயக்குநர் ஜானு பருவாவும் பத்ம பூஷண்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர்களை தவிர,கலைத்துறையில், கன்னியாகுமரி அவசரலா, நரேஷ் பேடி, இயக்குநர்சஞ்சய் லீலா பன்சாலி, ராகுல் ஜெயின், ரவீந்தர ஜெயின், பரசூன்ஜோஷி, பிரபுலா கர், தாரக்மேதா, நெயில் ஹெர்பர்ட், ஆகியோர் பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள, 104 பேருக்கும், வரும் மார்ச் அல்லது ஏப்ரலில், ஜனாதிபதி விருதுகளை வழங்குவார் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.