ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த லிங்கா படம் கடந்த மாதம் 12ந் தேதி வெளியானது. குறுகிய காலத்தில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட இந்தப் படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூலைக் கொடுக்கவில்லை. ஆனால் படம் பெரிய தொகைக்கு விற்கப்பட்டது. வாங்கிய விநியோகஸ்தர்கள் பலர் பெரும் நஷ்டம் அடைந்தனர். இதனால் நஷ்டஈடு கேட்டு அவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அரசியல்வாதிகளை அழைத்து வந்து ரஜினியை விமர்சிக்க வைத்தனர். லிங்கா படத்தை பற்றி குறைகூறி பேட்டியளித்தனர். இதனால் மனம் வருந்திய தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், லிங்கா படம் வசூல் குறைந்ததற்கு காரணமே விநியோகஸ்தர்களின் பிரச்சாரம்தான் என்று சொல்லி நஷ்டஈடு தரமாட்டேன் என்று கூறினார். இதனால் விநியோகஸ்தர்கள் மீண்டும் உண்ணாவிரதம் இருக்க கோர்ட் மூலம் முயற்சி செய்தனர். அதனை கோர்ட் ஏற்காமல் அவர்கள் மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில் ரஜனி லிங்கா விநியோகஸ்தர்களுக்கு நஷ்டஈடு தர முன்வந்திருப்பதாக நம்பகமான வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்திருக்கிறது. ரஜனி தனக்கு நெருக்கமான விநியோகஸ்தரான திருப்பூர் சுப்பிரணியத்தை அழைத்து இது தொடர்பாக பேசியிருக்கிறார். "என்னால் யாரும் நஷ்டப்படக்கூடாது. விநியோகஸ்தர்களுக்கு நஷ்டஈடு கொடுக்க ஏற்பாடு செய்கிறேன். ஆனால் விநியோகஸ்தர்கள் நடந்து கொண்ட விதமும் பேசிய பேச்சுக்களும் எனக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்துள்ளது" என்று அப்போது ரஜினி தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு திருப்பூர் சுப்பிரமணியம் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேசை சந்தித்து பேசியுள்ளார்.