அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
குடியரசு தினத்தன்று, நடிகர் அமிதாப் பச்சன், கோல்கட்டாவில் உள்ள ரவீந்திரநாத் தாகூர் இல்லத்தில், தேசிய கீதம் பாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இளையராஜா இசையமைப்பில், பால்கி இயக்கத்தில், அமிதாப் பச்சன், தனுஷ், அக்ஷரா ஹாசன் நடிப்பில் உருவாகியுளள ஷமிதாப் படம், விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தை பிரபலத்தும் பொருட்டு, ஷமிதாப் டீம், பல்வேறு நகரங்களில் புரோமோஷனல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதன் ஒருகட்டமாக, குடியரசு தினமான நாளை (ஜனவரி 26ம் தேதி), கோல்கட்டாவில் உள்ள ரவீந்திரநாத் தாகூர் இல்லத்தில், அமிதாப் பச்சன் தேசிய கீதம் பாட உள்ளார். இதனை வீடியோ எடுத்து வெளியிட உள்ளனர். இதுகுறித்து இயக்குநர் பால்கி கூறியதாவது, ரவீந்திரநாத் தாகூர் இல்லத்தில், தேசிய கீதம் பாடும் வகையிலான படப்பிடிப்பு நடத்தப்பட இருப்பது இதுவே முதல் முறை என்று கூறியுள்ளார். நடிகர் அமிதாப் பச்சன் கூறியதாவது, நான் தேசிய கீதம் பாட உள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார்.