இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
நயன்தாரா சாயலில் மலையாளததில் இருந்து தமிழுக்கு இறக்குமதியானவர் பானு. நயன்தாராவை ஐயா படத்துக்காக தமிழுக்கு கொண்டு வந்த அதே டைரக்டர் ஹரியே பானுவை தாமிரபரணி படத்துக்காக தமிழுக்கு கொண்டு வந்ததால், அடுத்து இவரும் நயன்தாரா போன்று முன்னணி நடிகையாகிவிடவார் என்ற எதிர்பார்ப்புகள் அப்போது இருந்தது.
அதற்கேற்ப படமும் வெற்றி பெற்றதால் சில படங்களும் பானுவுக்கு கிடைக்கும் சூழல் இருந்தது.ஆனால் அந்த நேரம் பானுவின் குடும்பத்தில் ஏற்பட்ட சில சலசலப்புகளால் அவர் சில மாதங்களாக கேரளாவுக்கு சென்றுவிட்டார். அதனால் தேடிவநத படங்களில்கூட அவரால் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர், ஆர்கே நடித்த அழகர்மலை மற்றும் சட்டப்படி குற்றம், பொன்னர்சங்கர், மூன்று பேர் மூன்று காதல் , தேசிங்கு ராஜா ஆகிய படங்களில் நடித்த பானு, தற்போது வாய்மை, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். இதில் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக தமன்னா நடிக்க, பானு சந்தானத்துக்கு ஜோடியாக நடிக்கிறார்.