தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ரஜினியின் லிங்கா படம் வெளியாக இருந்த நேரத்தில் சில சிறிய படங்கள் வெளியாகாமல் பின் வாஙகின. அதையடுத்து பொங்கலுக்கு ஐ, ஆம்பள, என்னை அறிந்தால் என மூன்று பெரும் படங்கள் வருகிறது என்று அப்போது ரிலீசுக்கு தயார் நிலையில் இருந்த பல படங்கள் பிப்ரவரி ரிலீஸ் என்று ஓட்டம் பிடித்தன.
ஆனால், பொங்கலுக்கு அஜீத்தின் என்னை அறிந்தால் வெளியாகவில்லை. இறுதிகட்ட வேலைகள் முடியவில்லை எனறு சொல்லி ஜனவரி 29-நதேதிக்கு ரிலீசை தள்ளி வைத்தனர். அதனால், ஜனவரி கடைசியில் திரைக்கு வர இருநத படங்கள் காதலர் தினத்துக்கு சென்றன. ஆனால். இப்போது என்னை அறிந்தால் பிப்ரவரி 5-ந்தேதிக்கு தள்ளிப்போய் விட்டது. இந்த நிலையில், தான் இயக்கி நடித்து இசையமைத்துள்ள இசை படத்தை ஜனவரி 30ந்தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
ஏற்கனவே கிறிஸ்துமஸ்துக்கு இசை படத்தை வெளியிடுவதாக இருந்த அவர், அந்த சமயத்தில் கயல் உள்ளிட்ட சில படங்களால் தியேட்டர் பிரச்சினை ஏற்படும் என்று பின்வாங்கினார். அதையடுத்து, பொங்கலுக்கு பெரிய படங்கள் வந்ததால் பிப்ரவரியில் தனது படத்தை வெளியிட முடிவு செய்து வைத்திருந்தார். ஆனால், எதிர்பாராதவிதமாக இப்போது அஜீத்தின் என்னை அறிந்தால் பிப்ரவரி 5-ந்தேதிக்கு சென்றிருப்பதால், ஜனவரி 30ந்தேதி தனது இசை படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.