அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
நேரம், ஜிகர்தண்டா படங்களில் நடித்து தமிழக ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றவர் பாபி சிம்ஹா. இவர் தற்போது நாயகனாக நடித்து வெளியாக இருக்கும் படம் சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது. இப்படத்தை மருதுபாண்டியன் இயக்கியுள்ளார். வெளியூர்களில் இருந்து பிழைப்புதேடி சென்னைக்கு வந்த ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நடக்கக்கூடிய சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் தயாராகியுளளது. முக்கியமாக பேச்சுலர்கள் வீடு கிடைக்காமல் படும்அவஸ்தை, வேலை தேடி அலைவது, அவர்கள் இங்கே சந்தோசமாக இருக்கிறார்களா? இல்லையா? என்பது போன்ற பலதரப்பட்ட நிகழ்வுகளை இப்படம் சொல்ல வருகிறது. இதில் பாபி சிம்ஹா முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
சமீபகாலமாக கதைகளுக்கு ரசிகர்கள் முதலிடம் கொடுத்து வருகிறார்கள். என்பதால் முழுக்க முழுக்க கதைககு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டஇந்த படம், ஒரு அழுத்தமான வாழ்வியல் கதை என்றபோதும் அதை கமர்சியலாக அதாவது, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சூது கவ்வும் வரிசையில் இன்றைய ரசிகர்களின் ரசனைகளை கருத்தில் கொண்டு படமாக்கப்பட்டிருக்கிறது.
முக்கியமாக பொய் சொல்வது பல பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கிறது. அதனால் பொய் சொல்லக்கூடாது என்றொரு விசயத்தையும் கருத்தாக சொலலாமல் கதையோடு சொல்லியிருக்கிறார்கள். தற்போது சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது படத்தின் அனைத்து கட்ட வேலைகளும் முடிந்து ரிலீசுக்கு தயார்நிலையில் இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தை தமிழ் சினிமாவிலுள்ள சில முக்கிய டைரக்டர்களுக்கு திரையிட்டு காண்பித்துள்ளனர். அந்த வகையில், பாரதிராஜா, கே.பாக்யராஜ், பாண்டிராஜ், ராம், கார்த்திக் சுப்புராஜ், பாலாஜி தரணீதரன் என பலர் பார்த்துள்ளார்களாம்.
படத்தைப்பார்த்த பாரதிராஜா, இப்படம் அனைவருமே பார்க்க வேண்டிய நல்ல படம் என்று பாராட்டியுள்ளாராம். அதேபோல், இந்த படத்தின் மேக்கிங்கை பார்த்தால் ஒரு கைதேர்ந்த இயக்குனர் இயக்கியது போல் உள்ளது. அதோடு இந்த படத்தை பார்த்த பிறகுதான் நாம் ஏன் இந்த மாதிரி கதைகளை யோசிக்காமல் மிஸ் பண்ணிட்டோம் என்று பீல் பண்ணினாராம் கே.பாக்யராஜ்.