தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள சினிமாவின் வித்தியாசமான ஹீரோயின் என அபர்ணா கோபிநாத்தை சொன்னால், அதற்கு நூறு சதவீதம் அவர் பொருத்தமானவர்தான். காரணம் அவர் நடித்த பெரும்பாலான படங்களில் தனது கெட்டப்பை பற்றி கவலைப்படாமல் பாப்கட்டிங் தலையுடன் ஒரு ஆண் போலவே மிடுக்குடன் நடித்திருப்பார்.. துல்கருடன் நடித்த 'ஏபிசிடி', ஆசிப் அலியுடன் 'பைசைக்கிள் தீவ்ஸ்', மம்முட்டியுடன் நடித்த 'முன்னறியிப்பு' என மூன்று படங்களையும் அதற்கு உதராணம் காட்டலாம்.
இப்போதும் அவருக்கு 'ஒண்ணாம் லோக மஹாயுதம்' என்கிற படத்தில் 'அசிஸ்டன்ட் கமிஷனர் தாரா' என்கிற கம்பீரமான கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. இந்தப்படத்திற்காக அவர் சண்டைக்காட்சிகளிலும் நடிக்கவேண்டியிருந்தது.. போலீஸ் கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டு சண்டைக்காட்சிகளில் நடிக்க பயந்தால் எப்படி? ஆனால் ஸ்டண்ட் மாஸ்டர் ரன் ரவி சொன்னதையும் மீறி டூப் போடாமல் சண்டைக்காட்சிகளில் நடித்து படப்பிடிப்பு குழுவினரை அசத்தியுள்ளார் அபர்ணா கோபிநாத்.