இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
லிங்கா படத்தை வாங்கி வெளியிட்டதில் 40 கோடி நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக கூறி சில விநியோகஸ்தர்கள் கடந்த 10ந் தேதி உண்ணாவிரதம் இருந்தார்கள். படத்தை பற்றி தவறான செய்திகளை விநியோகஸ்தர்களே பரப்பி படத்தின் வசூலை கெடுத்து விட்டதால் நஷ்டஈடு தரமுடியாது என்று தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தெரிவித்துவிட்டார்.
இதனால் மீண்டும் வருகிற 27ந் தேதி உண்ணாவிரபோராட்டம் நடத்த லிங்கா விநியோகஸ்தர்கள் போலீசிடம் அனுமதி கேட்டனர். போலீசார் அனுமதி மறுக்கவே, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று (ஜன 23) விசாரணைக்கு வந்தது. "ஏற்கெனவே உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு வழக்கு தொடர்ந்தனர் அப்போது அனுமதி கொடுக்கப்பட்டது. இப்போது மீண்டும் கேட்கிறார்கள். எனவேதான் மறுக்கப்பட்டது" என்று போலீஸ் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.