சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
'பாண்டிய நாடு' படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் சுசீந்திரன், விஷால் மீண்டும் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் 26ம் தேதி முதல் ஐதராபாத்தில் ஆரம்பமாக உள்ளது. அன்று முதல் காஜல் அகர்வால், சூரி ஆகியோர் பங்கு பெறும் காட்சிகளை படமாக்க உள்ளார்கள். விஷால், அதற்கடுத்து சில நாட்கள் கழித்துத்தான் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். விஷால் நடித்து பொங்கலன்று வெளிவந்த 'ஆம்பள' திரைப்படம் 30ம் தேதி தெலுங்கில் 'மகா மகாராஜு' என்ற பெயரில் வெளியாக உள்ளது. அந்தப் படத்திற்கான பிரமோஷன் வேலைகளையெல்லாம் முடித்த பிறகுதான் புதிய படத்தின் படப்பிடிப்பில் விஷால் கலந்து கொள்ளப் போகிறார்.
'பாண்டிய நாடு' படத்திற்குப் பிறகு விஷால் “நான் சிகப்பு மனிதன், பூஜை, ஆம்பள” ஆகிய படங்களில் நடித்து விட்டார். சுசீந்திரன் அந்தப் படத்திற்குப் பிறகு 'ஜீவா' படத்தை மட்டுமே இயக்கினார். 'பாண்டிய நாடு' திரைப்படம் விஷால் நடித்த திரைப்படங்களிலேயே ஒரு சிறந்த படமாகவும் வசூலை அதிகம் குவித்த படமாகவும் அமைந்தது. அதனால், அந்தப் படத்தில் இடம் பெற்ற இசையமைப்பாளர் இமான், ஒளிப்பதிவாளர் மதி ஆகியோரும் மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளனர். இந்தப் படத்தில் முதலில் லட்சுமி மேனன்தான் கதாநாயகியாக நடிப்பதாக இருந்தது. அதன் பின் அவர் மாற்றப்பட்டு காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.