ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தீநகர், அகம்புறம், காசேதான் கடவுளடா போன்ற படங்களை இயக்கியவர் திருமலை. இவர் தற்போது மான்வேட்டை என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படததில் ஷரன்-சுனிதா, சிங்கம்புலி ஆகியோர் நடித்துள்ளனர்.இந்த படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று காலை சென்னையில் நடைெப்றறது. விழாவில், விக்ரமன், எஸ்.தாணு, முன்னாள் மேயர் மா.சுப்ரமணியம், ராஜன், விவேகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இப்படம் பற்றி டைரக்டர் திருமலை கூறும்போது, நான்கு நண்பர்கள் கோடை விடுமுறையை கொண்டாட ஒரு மலைப்பிரதேசத்துக்கு செல்கிறார்கள். அப்போது ஒவ்வொருவராக மர்மமான முறையில் இறந்து போகிறார்கள. கடைசியாக மிஞ்சும் ஹீரோ அந்த மர்மத்தை கண்டு பிடிப்பதுதான் கதை. மேலும், குறைந்த பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்த படத்தை வெறும் 15 நாளில் படமாக்கினேன். அதேசமயம் படத்தின் மேக்கிங்கில் எந்த குறையும் இருக்காது என்றார்.
அவரைத் தொடர்ந்து முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியம் பேசுகையில், நான் எந்த சினிமா விழாக்களிலும் கலந்து கொண்டதில்லை. இந்த படத்தின் நாயகன் ஷரன், கு.க.செல்வம் அவர்களின் மகன் என்பதால் அவரை வாழ்த்துவதற்காக வந்தேன். மேலும், நான் சென்னை நகரத்தின் மேயராக இருந்தபோதும் சரி, இப்போதும் சரி, வாரம் ஒரு படம் பார்த்து விடுவேன். ஆனால் டிவிடியில் பார்க்கும பழக்கமெல்லாம் எனக்கு கிடையாது.
எந்த படமாக இருந்தாலும் அதற்கென ஒரு நேரத்தை ஒதுக்கி தியேட்டருக்கு சென்று பார்ப்பேன். அதுதான் எனக்கு பிடிக்கும். அதேபோல் இந்த மான்வேட்டை படத்தையும் தியேட்டரில் ரசிகர்களோடு அமர்ந்து பார்க்க ஆர்வத்தோடு இருக்கிறேன் என்றார்.