பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
2000-ம் வருடத்தில் பிரபுதேவா-மீனா நடித்த டபுள்ஸ் என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த்தேவா. அந்த படத்தை பாண்டியராஜன் இயக்கியிருந்தார். அதையடுத்து, எம்.குமரன் சன்ஆப் மகாலட்சுமி, சிவகாசி, ஆழ்வார், பழனி என 60 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.
ஆனால், ஆரம்பத்தில் விஜய், அஜீத், ஜெயம்ரவி என முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து ஸ்ரீகாந்த்தேவா, சமீபகாலமாக பிரபலமில்லாத ஹீரோக்களின் படங்களுக்கே அதிகமாக இசையமைத்து வருகிறார்.
இதுபற்றி அவர் கூறும்போது, என்னைப்பொறுத்தவரை நான் சின்ன படம், பெரிய படம் என்கிற ரீதியில் எப்போதுமே ஒர்க் பண்ணியதில்லை. எந்த படமாக இருந்தாலும் அந்த கதைக்கும், சூழலுக்கும் ஏற்ற இசையை கொடுக்கிறேன். முக்கியமாக என்னை நம்பி படம் கொடுக்கும் டைரக்டர், தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்பறிந்து இசையமைக்கிறேன்.
இன்னும் சொல்லப்போனால், நான் எப்போதுமே தயாரிப்பாளர்களின் இசையமைப்பாளர்தான். காரணம், அவர்கள் என்ன பட்ஜெட் சொன்னாலும் அதற்கேற்ப இசையமைப்பேன். அதேசமயம், எனது தரத்தை குறைத்து விடக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்த வருகிறேன். அதனால்தான், எனக்கு சான்ஸ் கொடுத்து வரும் நிறுவனங்கள் என்னை விட்டு விலகுவதில்லை. ஸ்ரீகாந்த்தேவா நமது யூனிட் இசையமைப்பாளர் என்று அவர்களில் ஒருவரான என்னையும் சேர்த்துககொள்கின்றனர் என்று கூறும் ஸ்ரீகாந்த்தேவா, தற்போது தான் இசையமைத்துள்ள, பூலோகம், எம்ஜிஆர், சிவாஜி ரஜினி கமல் போன்ற படங்களை பெரிய அளவில் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்.