ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சினிமாவுக்கு இசையமைப்பதன் மூலம் மட்டுமல்ல இன்னொரு வழியிலும் இசையமைப்பாளர்களுக்கு பணம் கொட்டுகிறது. வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சி நடத்துவதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்கள் நம் ஊர் இசையமைப்பாளர்கள். அதில் கிடைக்கும் பணம் வெளிநாட்டிலிருந்து கிடைப்பதால் வருமான வரி செலுத்துவதிலும் சலுகை கிடைக்கிறது. எனவே வெளிநாடுகளில் கலைநிகழ்ச்சி நடத்துவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது முன்னணி இசையமைப்பாளராக விளங்கும் அனிருத்தும் தற்போது இந்த ரூட்டைப் பிடித்துவிட்டார்.
மலேசியாவில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவிருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத். மலேசியாவில் உள்ள சன்வே லகூன் எனும் தீம் பார்க்கில் வரும் 31ஆம் தேதி இரவு இந்த இசை நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. அனிருத் தனிப்பட்ட முறையில் நேரடியாக முதல்முறையாக நடத்தும் இசைநிகழ்ச்சி இது. கோல்டன் கூஸ் ஈவன்ட்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்ச்சியில், அனிருத்தின் இசையில் பாடிய அத்தனை பாடகர்களும் பங்குகொண்டு நேரடியாகப் பாடவிருக்கிறார்கள்.
கொலவெறி மூலம் உலகப்புகழ்பெற்ற தனுஷும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனிருத்துடன் இணைந்து பாடவிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொள்ளும் கலை நிகழ்ச்சிகளுக்கு மலேசியாவில் எப்போதும் அமோக ஆதரவு இருக்கும். அருத்தின் இந்த நேரடி இசை நிகழ்ச்சிக்கும் ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.