ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் |
பொதுவாக தமிழ் சினிமாவில் சில ஹீரோக்களுக்கு நடிக்க வந்த இருபது வருடங்கள் கழித்து வரும் ஆசை தான் ஒரு படத்தை டைரக்ட் செய்யவேண்டும் என்பது.. கமல். விஜயகாந்த், ஆகியோர் படம் இயக்கியதும் அப்படித்தான். ஆனால் வருடத்தில் ஆறு படங்களாவது நடித்துவிடும் மலையாள ஹீரோக்களுக்கு இப்படி ஒரு எண்ணம் துளியும் இருப்பதாக தெரியவில்லை. இருந்தாலும் மலையாள இளம் முன்னணி நடிகரான பிருத்விராஜுக்கு இப்போது இயக்குனராகும் ஆசை வந்துள்ளது..
சினிமாவில் நுழைந்த இந்த பத்து வருடங்களில் கதாநாயகன், வில்லன் என தனது நடிப்பு பயணத்தை தொடர்ந்த பிருத்விராஜ் 'உருமி' படம் மூலமாக தயாரிப்பாளராகவும் மாறினார். தற்போது 'டபுள் பேரல்' என்கிற படத்தையும் தயாரித்து அதில் ஒரு ஹீரோவாகவும் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் தான் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்கிற ஆசை அவருக்குள் உதித்துள்ளதாம். இதுபற்றிய அறிவிப்பு விரைவிலேயே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.