இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இசையமைப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயமாக தற்போது சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பல சவுண்ட் இஞ்சினியர்கள் எல்லாம் இன்று இசையமைப்பாளர் என்று சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். இசை என்பது ஒரு உணர்வு, அது உள்ளத்தை உருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு இசைக்குச் சொந்தக்காரர்தான் இளையராஜா.
1000 படங்களுக்கு மேல் இளையராஜா இசையமைத்து விட்டார் என்கிறார்கள், இல்லையில்லை அவர் இசையமைத்தது 1200 படங்களுக்கு மேல் என்றும் சிலர் சொல்கிறார்கள். அப்படிப்பட்ட சாதனையாளனை தமிழ்த் திரையுலகம் ஏனோ இன்னும் மிகப் பெரிய விழா எடுத்துப் பாராட்டவில்லை. 'ஷமிதாப்' படத்தின் இயக்குனரான பால்கி மிகப் பெரிய விழாவை எடுக்கவில்லை என்றாலும் பெரிய மனதுடன் அந்த சாதனையாளனைப் பாராட்டியுள்ளார்.
ஒரே மேடையில் அமிதாப், கமல், ரஜினி, இளையராஜா, ஸ்ரீதேவி என அனைவரையும் மேடையேற்றியிருக்கிறார். அந்த விழாவில் கமல்ஹாசன் இளையராஜாவைப் பற்றிப் பேசும் போது ஒரு அரிய சாதனைத் தகவல் ஒன்றைச் சொன்னார்.
“ஹே ராம்' படத்திற்கு முதலில் வேறு ஒரு இசையமைப்பாளரை வைத்து பாடல்களைப் பதிவு செய்து அவற்றைப் படமாக்கியும் விட்டேன். அதன் பின் சில காரணங்களால் அந்த இசையமைப்பாளரை மாற்றி விட்டு, இளையராஜாவிடம் போய் நின்றேன். பாடல்களைப் படமாக்கிவிட்டேன் , நீங்கள் வேறு பாடல்களைத் தந்தால் அவற்றை மீண்டும் எடுக்கிறேன் என்று சொன்னேன். அவரோ நான் படமாக்கிய பாடல்களைப் போட்டுப் பார்த்து, அந்தக் காட்சிகளுக்குத் தகுந்தபடி வேறு பாடல்களை இசையமைத்துத் தந்தார். வெறும் வாயசைவை வைத்து அதற்குப் பொருத்தமான பாடல்களை அவர் உருவாக்கினார். அப்படி ஒரு சாதனையை யாராலும் செய்ய முடியாது,” என்றார்.
இளையராஜாவின் திறமையை நன்றாக உணர்ந்த கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோராவது முன் நின்று அந்த சாதனையாளருக்கு விழா எடுக்கலாமே....செய்வார்களா...?