ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
லிங்கா' படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக சமீபத்தில் பிரச்சனை ஏற்பட்டது. குறிப்பாக, திருச்சியைச் சேர்ந்த விநியோகஸ்தரான சிங்காரவேலன் என்பவர் உண்ணாவிரதம், பேட்டிகள் என பிரச்சனையை விஸ்வரூபம் எடுக்க வைத்தார்.
இந்நிலையில் அந்தப் பிரச்சனையில் திடீர் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. 'லிங்கா' படத்திற்காக ஏற்பட்ட நஷ்டத்தை கணக்கிட்டு சம்மந்தப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு மூன்று நாட்களுக்குள் வழங்க ரஜினிகாந்த் முடிவு எடுத்திருக்கிறார். இதற்காக கோவை ஏரியாவின் வினியோகஸ்தரான திருப்பூர் சுப்பிரமணியத்தை பொறுப்பாளராக நியமித்திருக்கிறார் ரஜினிகாந்த். ஏற்கெனவே 'பாபா' படத்திற்காக நஷ்டம் ஏற்பட்டது என்று சொல்லப்பட்ட போது அதைச் சரியாகக் கணக்கிட்டு ரஜினிகாந்த் சார்பாக, அவற்றைத் திருப்பிக் கொடுத்ததில் முக்கிய பங்கு வகித்தவர்தான் இந்த திருப்பூர் சுப்பிரமணியம்.
'லிங்கா' படத்திற்காக கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் தொகை, மினிமம் கியாரண்டி அடிப்படையில் ஏற்பட்ட நஷ்டத் தொகை ஆகியவற்றை தமிழ்நாடு முழுவதும் கணக்கிடும் பணியை திருப்பூர் சுப்பிரமணியம் ஏற்கெனவே ஆரம்பித்து விட்டார். இன்னும் மூன்று நாட்களுக்குள் அந்த கணக்கு முடிக்கப்பட்டு நஷ்டத் தொகை அனைவருக்கும் திருப்பி அளிக்கப்பட உள்ளது.
'பாபா, குசேலன்' ஆகிய படங்களைத் தொடர்ந்து 'லிங்கா' படத்திற்காகவும் ரஜினிகாந்த் நஷ்டத் தொகையை திருப்பித் தரும் முடிவை செயல்படுத்துகிறார். தன் படத்தால் நஷ்டப்பட்டவர்களின் கண்ணீரைத்துடைத்ததன் மூலம் தான் எப்போதுமே உயர்ந்த உள்ளம் கொண்டவர் என்பதை ரஜினி மீண்டும் நிரூபித்திருக்கிறார்.