ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் ஆகிய இருவரும் பத்மவிபூஷண் விருதுக்கு தேர்வாகியுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி இந்தாண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு நாளை அறிவிக்க இருக்கிறது.
இதில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த் மற்றும் இந்தி சினிமாவின் மெகா ஸ்டாராக இருக்கும் அமிதாப் பச்சன் இருவரும் நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷண் விருதுக்கு தேர்வாகியுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பா.ஜ.வின் மூத்த தலைவர் அத்வானி மற்றும் யோகா குரு ராம்தேவ் ஆகியோரும் பத்மவிபூஷண் விருதுக்கு தேர்வாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இவர்கள் தவிர பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், வாழும்கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர்ஜி, பாலிவுட் நடிகர் திலீப் குமார், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, பரேஷ் ரவல், கவிஞர் பிரஜோஸ் ஜோஷி, இசையமைப்பாளர்கள் அனு மாலிக், இயக்குனர் ஜாஹ்னு பருவா, பிரபல பின்னணி பாடகி சுதா ரகுநாதன், பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, மல்யுத்த வீரர் சுசில் குமார் உள்ளிட்ட 148 பேர் பத்ம விருதுக்கு தேர்வாகியுள்ளதாக தெரிகிறது.
ஜன.,26ம் தேதியன்று அன்று நடைபெற இருக்கும் குடியரசு தினவிழாவின் பத்ம விருதுகள் வழங்கப்பட இருக்கிறது.