‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
மூன்று பேர் மூன்று காதல் படத்துக்கு பிறகு இயக்குனர் வஸந்த் இயக்கும் படம் தண்ணீர். க்ராஸ் வோர்ல்ட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தனது வஸந்த சித்திரம் மூலமாக தயாரிக்கிறார். சாந்தினி சசஷா என்ற புதுமுகம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். கர்நாட இசைப் பாடகியும், திரைப்பட பாடகியுமான சுதா ரகுநாதன் முதன் முறையாக இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். ரோல்ப் ஒளிப்பதிவு செய்கிறார். பாலிவுட் நடிகர் குல்ஷந்த் கிரோவர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இது இயக்குனர் அசோகமித்ரன் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்படுகிறது. தண்ணீர் பிரச்சினையை மையமாக கொண்ட படம்.
படத்தின் துவக்க விழா நாளை (ஜன 23) காலை சென்னை நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது. இயக்குனர் பாரதிராஜா துவக்கி வைக்கிறார். பல வருடங்களுக்கு முன்பு இயக்குனர் கே.பாலச்சந்தர் தண்ணீர் தண்ணீர் என்ற படத்தை தண்ணீர் பிரச்சினையை மையமாக வைத்து இயக்கினார். அது கோமல் சுவாமிநாதனின் நாடகத்தை தழுவி எடுக்கப்பட்டது. கே.பாலச்சந்தரின் சீடர்தான் வஸந்த் என்பது குறிப்பிடத்தக்கது.