'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
நடிகர் சந்தானத்திற்கு நேற்று (ஜன 21) 35வது பிறந்த நாள். இதை அவர் எளிமையாக கொண்டாடினார். திருவண்ணாமலை சென்ற அவர் அண்ணாமலையாரை தரிசித்தார். சன்னிதிகளில் நெய்விளக்கேற்றி வழிபட்டார். பின்னர் அவர் அதிகாலையில் கிரிவலம் சென்றார். அவர் கிரிவலம் செல்லும் செய்தி கிடைத்து பொதுமக்கள் கூட்டம் சேரவே வேறு வழியில்லாமல் ஆட்டோவை வரவழைத்து அதில் கிரிவலம் சென்றார். போகிற வழியில் இருந்த நவக்கிரக சன்னிதிகளில் வழிபட்டார். அஷ்டலிங்கேஸ்வரர் கோவிலில் சாமி கும்பிட்டார்.
பின்னர் உள்ளூர் நண்பர்கள் மூலம் ஏற்பாடு செய்திருந்த அன்னதானத்தில் கலந்து கொண்டார்.
ஏழை மக்களுக்கு போர்வை தானம் வழங்கினார். "என்னுடைய ரசிகர்களும், பொதுமக்களும் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற வேண்டிக்கொண்டேன். அதுதான் எனது பிறந்த நாள் செய்தியுமாகும். இதுவரை 200 படங்கள் நடித்து விட்டேன். தற்போது 5 படங்களில் நடித்து வருகிறேன். அதில் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறேன். எனக்கேற்ற கதைகளில் நாயகனாவும் மற்ற படங்களில் காமெடியாகவும் தொடர்ந்து நடிப்பேன்" என்றார்.