விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
'உருமி' படத்தை தொடர்ந்து பிருத்விராஜ், ஆர்யா இருவரும் மலையாளத்தில் இணைந்து நடித்துவரும் படம் 'டபுள் பேரல்'.. 2013ல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய 'ஆமென்' படத்தை இயக்கிய லிஜோ ஜோஸ் பள்ளிசேரி தான் இந்தப்படத்தை இயக்குகிறார். இந்த ஸ்டார் ஹீரோக்களுடன் பிருத்விராஜின் சகோதரர் இந்திரஜித், ஆசிப் அலி மற்றும் சன்னிவெய்ன் ஆகியோரும் நடிப்பதால், இது அக்மார்க் மல்டி ஸ்டாரர் படமாக உருவாகி வருகிறது.
இந்தப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக விரைவில் ரோடு ஷோ ஒன்றை நடத்த தீர்மானித்திருக்கிறார்களாம்.. அதாவது இந்த ஐந்து நடிகர்களும் இந்தப்படத்தில் தாங்கள் நடிக்கும் அதே காஸ்ட்யூமுடன் லைவ்வாக திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை பயணிக்க இருக்கிறார்களாம். இந்த பயணத்தின்போது இந்த ஐந்து ஹீரோக்களின் ரசிகர்களும் இதில் பங்கேற்று, இந்த சாலையில் உள்ள முக்கியமான இடங்களில் இந்த டீமுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்து பிரமாதப்படுத்த இருக்கிறார்களாம்.