தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கமல்ஹாசன்- சரிகா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். 1988ல் திருமணம் செய்து கொண்ட அவர்கள் 2004ம் ஆண்டு வரை கணவன்-மனைவியாக வாழ்ந்தனர். பின்னர், ஸ்ருதிஹாசன், அக்ஷ்ராஹாசன் என்ற இரண்டு மகள்களோடு சந்தோசமாக வாழ்ந்து வந்தவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் முறைப்படி பிரிந்துவிட்டனர்.
இதையடுத்து, மும்பையில் தனது மகள்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் சரிகா. கமலின் மகள்களான ஸ்ருதி, அக்ஷ்ரா இருவரும் அவ்வப்போது கமலை சந்தித்து வருகின்றனர். ஆனால், கமல்-சரிகா இருவரும் பிரிந்து பிறகு சந்தித்துக்கொண்டது இல்லையாம்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் ஷமிதாப் படத்தின் இசைவௌியீட்டு விழா மற்றும் அப்படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா 1000 படங்களுக்கு இசையமைத்துற்கான பாராட்டு விழாவும் நடந்தது. இதில் அமிதாப், ரஜினி, கமல் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது அந்த படத்தின்(ஷமிதாப்) நாயகியாக தன் மகள் அக்ஷ்ரா நடித்திருந்ததால் சரிகாவும் வந்திருந்தாராம்.
அப்போது, மேடையில் அமர்ந்திருந்த கமல், முன்னாள் மனைவி சரிகாவை பார்த்ததும், தனது இருக்கையில் இருந்து சென்று சரிகாவிடம் நலம் விசாரித்தார். அப்போது அவரும் எந்தவித தயக்கமும் இன்றி புன்னகையுடன் அவரது கைகளை பிடித்தபடி சிறிது நேரம் பேசினார். தனது அப்பா-அம்மா இருவரும் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்து, பேசிக்கொள்வதை அருகில் அமர்நதிருநத ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தார்.