ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
இளையராஜா தனது மகன்களான கார்த்திக்ராஜா, யுவன் ஷங்கர் ராஜா இருவரில் கார்த்திக்ராஜாவைதான் பெரிய அளவில் எதிர்பார்த்தார். அதனால் தான் இசையமைத்த சில படங்களில் அவரை பாடல் கம்போஸிங் செய்ய வைத்து படிப்படியாக சினிமா களத்தில் இறக்கி விட்டார். ரஜினி நடித்த பாண்டியன் படத்தில் இடம்பெற்ற பாண்டியனின் ராஜ்யத்தில் உய்யலாலா என்ற பாடலுக்குகூட கார்த்திக்ராஜாதான் கம்போஸ் செய்தார். அந்த பாடல் வெற்றி பெற்றது. அதையடுத்து தனித்து இசையமைக்கத் தொடங்கிய கார்த்திக்ராஜாவுக்கு ஆரம்பத்தில் சில ஹிட்கள் கிடைத்தபோதும் பின்னர் ஹிட் கிடைக்கவில்லை. அதனால் மார்க்கெட்டில் பின்தங்கினார்.
ஆனால், அதன்பிறகு சும்மா இறக்கி விடுவோமே என்று பெரிய எதிர்பார்ப்பில்லாமல் இறக்கி விடப்பட்ட யுவன் ஷங்கர் ராஜா இப்போது 100 படங்களுக்கு இசையமைத்து முன்னணியில் இருந்து கொண்டிருக்கிறார். இருப்பினும், கார்த்திக்ராஜாவும் அவ்வப்போது ஒரு படத்துக்கு இசையமைத்து வந்தவர். இப்போது விஜயகாந்தின் மகன் சண்முகப்பாணடியன் நாயகனாக அறிமுகமாகியுள்ள சகாப்தம் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இந்த படம் தனக்கு திருப்புமுனையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பாடல் மற்றும் பின்னணி இசையில் அதிக கவனம் செலுத்திக்கொண்டிருக்கும் கார்த்திக்ராஜா, சமீபகாலமாக டி.இமான், அனிருத் உள்ளிட்ட சில இசையமைப்பாளர்கள் நடிகர் நடிகைகளை பாட வைத்து பரபரப்பு கூட்டி வருவதால், சகாப்தம் படத்திலும், சிம்புவை ஒரு பாடல் பாட வைத்தார். அதையடுத்து, ரம்யாநம்பீசன், ஆண்ட்ரியா ஆகியோரையும் பாட வைத்திருக்கிறார். அதோடு அவர்களை முன்வைத்தே பப்ளிசிட்டிகளையும் முடுக்கி விட்டு மீண்டும் மார்க்கெட்டில் விட்ட இடத்தை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார் கார்த்திக்ராஜா.