விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
1980-90களில் தென்னிந்திய சினிமாவை கலக்கிய சகோதரிகள் அம்பிகா-ராதா. இதில் ராதா திருமணத்திற்கு பிறகு மும்பையில் செட்டிலானவர், தனது மகள்களான கார்த்திகா-துளசி நாயர் இருவரையும் சினிமா களத்தில் இறக்கி விட்டுள்ளார். இதில் கோ, அன்னக்கொடி படங்களில் நடித்த கார்த்திகா, தற்போது எஸ்.பி.ஜனநாதனின் புறம்போக்கு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
ஆனால், மணிரத்னத்தின் கடல் படத்தில் அறிமுகமான அவரது இளைய மகள் துளசி நாயர், அதன்பிறகு ஜீவாவுடன் யான் என்ற படத்தில் நடித்தார். ஆனால் அவர் நடித்த இரண்டு படங்களுமே தோல்வியடைந்ததால் அடுத்தபடியாக வேறு படங்களில் கமிட்டாகாமல் இருக்கிறார் துளசி.
இந்த நிலையில், இனிமேல் எனக்கு சினிமா வேண்டாம். படிப்பில் மட்டும் கவனம் செலுத்துகிறேன் என்று அம்மாவிடம் சொல்கிறாராம் துளசி. ஆனால் அவரோ, சினிமாவில் நான் பார்க்காத வெற்றி தோல்வியா. இதெல்லாம் ரொம்ப சகஜம். ஆனால் ஒரு படம் ஹிட் அடித்து விட்டால். அதன்பிறகு நம்மை நிம்மதியாக தூங்ககூட விடமாட்டார்கள். அத்தனை வாய்ப்புகள் அணிவகுத்து நிற்கும். இதுதான் சினிமா என்று மகளுக்கு அட்வைஸ் செய்தபடி புதிய படங்களுக்கு கல்லெறிந்து வருகிறார் ராதா.
முக்கியமாக, ஓரிரு படங்கள் ஹிட் கொடுத்த டைரக்டர்களாக தேடிப்பிடித்து சான்ஸ் கேட்டு கேட்கிறார். இருப்பினும், துளசி நாயர் நடித்த இரண்டு படங்களுமே தோல்வி என்பதோடு அவரது உடல்கட்டும் ஆன்ட்டி அளவுக்கு பெருத்து காணப்படுவதால் அவருக்கு பிடிகொடுக்காமல் ஓட்டம் பிடித்து வருகிறார்கள் டைரக்டர்கள்.