பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நயன்தாரா தமிழில் ஐயா படத்தில் அறிமுகமானார். அந்த படத்தில் சரத்குமாருடன் நடித்தவர், அதன்பிறகு ரஜினி, விஜய், அஜீத், சிம்பு, ஆர்யா என அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்து விட்டார். தமிழைப்போலவே மலையாளம், தெலுங்கு சினிமாவிலும் முன்னணி வகித்து வருகிறார்.
தற்போது நடிக்க வந்து 10 ஆண்டுகளுக்கு பிறகும் முன்வரிசை ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துக்கொண்டிருக்கிறார். அதிலும் இதற்கு முன்பு நடித்ததை விடவும் வெயிட்டான கதாபாத்திரங்களில் நடித்து வரும் நயன்தாராவை சிலர், கோலிவுட்டின் நம்பர் ஒன் நாயகி நயன்தாராவே என்று கூறி வருகின்றனர்.
ஆனால், அப்படி அவர்கள் கூறுவது நயன்தாராவின் காதில் விழுந்தால் உடனே அவர்களை அழைத்து, அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். கோலிவுட்டில் நான் மட்டுமில்லை. எத்தனையோ நடிகைகள் இருக்கிறார்கள். வெற்றி தோல்வியை அனைவருமே சந்திக்கிறோம். அதனால், சீனியாரிட்டியை கருத்தில் கொண்டு என்னை நம்பர்ஒன் நடிகை என்று சொல்ல வேண்டாம். கோலிவுட்டில் இருக்கும் முன்னணி நடிகைகளில் நானும் ஒருத்தி. இங்கே யாருக்கும் எதுவும் நிரந்தரமில்லை என்று தெளிந்த மனநிலையுடன் அவர்களிடம் சொல்கிறார் நயன்தாரா.