ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இளையராஜா ஒரு மகான், அவருள் தேவி சரஸ்வதி குடியிருக்கிறாள் என்று கூறியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இசைஞானி இளையராஜா 1000 படங்களுக்கு இசையமைத்துள்ளார். பாலா இயக்கியுள்ள தாரை தப்பட்டை, அவரது ஆயிரமாவது படமாகும். இதை கொண்டாடும் விதமாக மும்பையில் அவருக்கு பாராட்டு விழா நடத்தினார் சீனிகம், பா, ஷமிதாப் படங்களின் இயக்குநர் பால்கி. இதில் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், கமல், ஸ்ரீதேவி உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, 1970களில் இருந்தே இளையராஜாவை எனக்கு தெரியும். அப்போது அவர் மிகவும் குறும்புக்காரராக இருந்தார். ஆனால் தொடர்ந்து அவரிடத்தில் மாற்றங்கள் ஏற்பட்டது. குறிப்பாக அவரது உடையில் ஏற்பட்ட மாற்றத்தை பார்த்துவிட்டு அவரை ராஜா சாமி என்றே அழைக்க தொடங்கினேன். அவரை பார்க்கும் போது மகான் போல தெரிகிறார். மேலும், அவருள் மாதா சரஸ்வதி குடிகொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று கூறினார்.