ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மத்திய தணிக்கை குழுவின் தலைவராக இருந்த லீலா சாம்சன் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து புதிய தலைவராக பிரபல படத் தயாரிப்பாளர் பஹ்லாஜ் நிஹலானி நியமிக்கப்பட்டுள்ளார். திரைப்பட தணிக்கை குழுவின் விதிமுறைகள் கடுமையாக்கப்படும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: தணிக்கை குழுவின் முந்தைய தலைவர் லீசா சாம்சன் தனது பதவிகாலத்தில் குறைந்த நாட்களே அலுவலகம் வந்துள்ளார். தணிக்கைத்துறை பதவியை ஒரு அலங்கார பதவியாகவே பயன்படுத்தியிருக்கிறார். தணிக்கை குழுவின் வளர்ச்சிக்காக எதையுமே செய்யவில்லை. நான் தணிக்கை குழுவின் விதிமுறைகளை கடுமையாக்க இருக்கிறேன்.
சமூகத்துக்கு நல்ல கருத்துக்களை சொல்லும் திரைப்படங்கள்தான் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது என்பது என் அனுபவத்தில் கண்ட உண்மை. இந்த மாதிரி படங்களுக்கு தணிக்கை குழு முன்னுரிமை கொடுக்கும். ஆபாசம், வன்முறை, மற்றவர்களின் உணர்வுகளை புன்படுத்துதல், தனிநபர் விமர்சனம் உள்ளிட்ட படங்களுக்கும், காட்சிகளுக்கும் கடுமையான விதிமுறைகள் கொண்டு வரப்படும். என்றார்.