இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
டார்லிங் படம் கொடுத்த வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார் இசையமைப்பாளரும், புதுஹீரோவுமான ஜி.வி.பிரகாஷ் குமார். ஹீரோவாக தான் நடித்து வௌிவந்த முதல்படம் வெற்றி பெற்றிருப்பதால் நடிப்பில் ஒரு நம்பிக்கை பிறந்திருக்கிறது. இதனால் அடுத்தபடியாக தான் ஸ்ரீதிவ்யாவுடன் நடித்துள்ள பென்சில் படத்தை, கோடை விடுமுறையில் வெளியிட வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகிறார்.
பென்சில் படத்தை தொடர்ந்து த்ரிஷா இல்லேண்ணா நயன்தாரா என்ற படத்தில் நடிக்கிறார் ஜி.வி. சமீபத்தில் தான் இப்படத்திற்கு பட பூஜை போடப்பட்டது, ஷூட்டிங்கும் விரைவில் துவங்க இருக்கிறது. இதுற்கு அடுத்து சிவி.குமாருக்கு ஒரு படத்தில் நடிக்க ஒப்பு கொண்டுள்ளார்.
நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வந்தாலும், இசையை விடவில்லை ஜி.வி. தற்போது கொம்பன் படத்தின் இசையமைப்பு வேலைகளை கிட்டத்தட்ட முடித்துவிட்ட ஜி.வி., அடுத்தப்படியாக, தனது 50வது படமாக விஜய், அட்லி இணையும் படத்திற்கு இசையமைக்க உள்ளார். இதுதவிர்த்து மலையாளத்தில் வௌிவந்து சூப்பர்ஹிட்டான தட்டத்தின் மறையத்து படத்தின் தமிழ் ரீ-மேக், வெற்றிமாறனின் விசாரணை, காக்க முட்டை, ஏ.எல்.விஜய்யின் இது என்ன மாயம் உள்ளிட்ட இவர் இசையமைக்கும் படங்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது.
நடிப்பு, இசை என இரண்டிலும் பிஸியாக இருக்கும் ஜி.வி.யிடம் நடிப்பா, இசையா... என்று கேட்டால் இரண்டுமே தான். இரண்டுக்கும் சரியான நேரம் ஒதுக்கி அதற்கு ஏற்றபடி உழைக்க இருக்கிறேன் என்கிறார் ஜி.வி.