இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பெரும்பாலும் டைரக்டர் ஷங்கர் இயக்கும் படங்களுக்கு ஏ சென்டர்களில்தான் நல்ல ஓப்பனிங் இருக்கும். அவர்கள் படத்தை பார்த்து விட்டு சொல்லும் ரிசல்ட்டுக்கு பிறகுதான் மற்ற ஏரியாக்களில் வசூல் சூடு பிடிக்கும். ஆனால், தற்போது வெளியாகியுள்ள ஐ படததைப்பொறுத்தவரை ஏ சென்டர்களுக்கு இணையாக பி அண்ட் சி சென்டர்களிலும் சரியான வசூலாம்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஏரியா வாரியாக ஐ படத்தின் வசூல் நிலவரத்தை தெரிந்து கொள்வதற்காக தனது டீம் ஒன்றை தமிழ்நாடு முழுக்க டூர் அனுப்பி வைத்தாராம் ஷங்கர். அப்படி சென்றவர்கள் முக்கிய நகரங்களுக்கு மட்டுமே செல்லாமல் கிராமப்புறங்களில் ஐ படம் ஓடும் தியேட்டர்களுக்கும் விசிட் அடித்திருக்கிறார்கள்.
அப்போது, நகரத்துக்கு நிகராக கிராமங்களில் உள்ள பல தியேடடர்களில் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்டபோதும், தியேட்டர்களுககு ரசிகர்கள் படையெடுப்பது வழக்கத்தைவிட அதிகமாகவே இருந்ததாம். இந்த ரிசல்ட் பற்றி ஷங்கரிடத்தில் தெரிவிக்கப்பட்டபோது, நான்கூட ஆணழகன், மாடலிங் சம்பந்தப்பட்ட படம் ஏ சென்டர்களைத்தான் அதிகமாக கவரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இப்போது நகரத்துக்கு நிகராக கிராமப்புறங்களிலும் படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு ஆச்சர்யமாக உள்ளது. இது ஏ சென்டருக்கு இணையாக கிராமத்து ரசிகர்களின் ரசனையும் மாறி விட்டதை உணர்த்துகிறது என்றாராம் ஷங்கர்.