ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இயக்குனர் எழில், துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம் போன்ற காதல் செண்டிமெண்ட் படங்களை இயக்கியவர். அவர் பாணி படங்களுக்கு மவுசு குறைந்ததும் சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தார். பின்னர் இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி காமெடி படம் இயக்கலாமே என்று களத்தில் இறங்கி மனம் கொத்தி பறவை, தேசிங்கு ரஜா, வெள்ளக்காரதுரை படங்களை இயக்கினார். மூன்று படங்களுமே ஓஹோவென ஓடாவிட்டாலும் தயாரிப்பாளர்களுக்கு லாபம் தந்த படம்.
எனவே அடுத்தும் அதே பாணியில் ஒரு காமெடி படத்தை இயக்க இருக்கிறார். இதற்கான ஸ்கிரிப்ட் தயாரிக்கும் பணியில் தீவிரமாக இருக்கிறார். தனது உதவியாளர்கள் 5 பேருடன் மகாபலிபுரத்தில் உள்ள பீச் ரிசார்ட்சில் முகாமிட்டுள்ளார். அங்கு கதை விவாவதம் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. புதிய படத்தையும் வெள்ளக்காரதுரை படத்தை தயாரித்த கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியனே தயாரிக்கலாம் என்று தெரிகிறது.