‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
ஐ படத்தின் வசூல் பற்றி கடந்த சில நாட்களாக பேசிக் கொண்டிருப்பவர்கள் படத்திற்காக எழுந்துள்ள பிரச்சனைகளைப் பற்றியும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். படத்தில் திருநங்கைகளைப் பற்றி ஷங்கர் தரக்குறைவாக காட்சிகளை அமைத்திருக்கிறார் என்று பல திருநங்கைகள் குற்றம் சாட்டி நேற்று போராட்டமும் நடத்தினார்கள். படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகளை நீக்கவில்லை என்றாலோ, மன்னிப்புக் கேட்கவில்லை என்றாலோ தொடர் போராட்டம் நடத்தப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஜென்டில்மேன் படத்திலிருந்து தன்னுடைய படங்களில் ஏதாவது ஒரு சமூகக் கருத்தை படத்துடன் பொருந்திப் போகும் அளவிற்குக் கொடுத்து சிறந்த இயக்குனர் என்று பெயர் வாங்கியவர் ஷங்கர். அவருடைய படங்களில் இடம் பெற்றுள்ள காட்சிகளுக்கு இதுவரை எந்தவிதமான எதிர்ப்பும் வந்ததில்லை . ஆனால், ஐ படத்தில் திருநங்கைகளை கிண்டலடிக்கும் விதமாக இடம் பெற்றுள்ள காட்சிகளை வைக்க வேண்டிய அவசியம் என்ன. அப்படி ஒரு காட்சி படத்தின் கதைக்கும் தேவையற்ற ஒன்றுதான். ஷங்கர் போன்ற இயக்குனர்களே அப்படிப்பட்ட காட்சிகளை வைப்பதன் மூலம் அவருடைய படத்தைப் பார்க்கும் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் அந்தக் காட்சியிலுள்ள விஷமத்தனம் சென்று போய் சேர்ந்து விடும்.
ஷங்கருக்கு வலது கரமாக இருந்த எழுத்தாளர் சுஜாதா இருந்தவரை அவருடைய படங்களில் எந்த ஒரு விஷயமமுமே ஒரு ஆழ்ந்த கண்ணோட்டத்துடன் பார்க்கப்பட்டது. ஆனால், ஐ படத்தில் சுஜாதா இல்லாத குறை நிறையவே தெரிகிறது. ஷங்கருக்கு உடனடித் தேவை சுஜாதா போன்ற சிறந்த எழுத்தாளர்கள்தான். அதை அவரும் உணர்ந்திருப்பார். இவ்வளவு போராட்டம் நடந்தும் ஷங்கர் இதுவரை எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்காதது ஆச்சரியமளிப்பதாக உள்ளது.
திருநங்கைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உடனடியாக அந்தக் காட்சியை நீக்க அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். விலங்கினங்களைக் கூட துன்புறுத்த அனுமதிக்காத சென்சார் இனி திருநங்கைகளை கொச்சைப்படுத்தும் காட்சிகளையும் அனுமதிக்கக் கூடாது...செய்வார்களா....?