மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
பொங்கலுக்கு, சுந்தர். சி. இயக்கத்தில், நான் நடித்து படம் வெளிவர வேண்டும் என்பதே எனது கனவாக இருந்தது. ஆம்பள படம், எனது கனவை நனவாக்கி உள்ளதாக நடிகர் விஷால் கூறியுள்ளார்.
பத்திரிகையாளர்களை சந்தித்த விஷால் கூறியதாவது, நடிகராக இருந்த நான், தயாரிப்பாளராகி அதிலும் வெற்றி பெற வேண்டும் என்று எனக்குள் நானே ஒரு சேலஞ்சை விடுத்துக்கொண்டேன். அதில் தற்போது வெற்றியும் பெற்றுள்ளேன். நடிகராகவும், தயாரிப்பாளராகவும், ஒரு முழு மனநிம்மதியை தற்போது நான் அனுபவித்து வருகிறேன். சுந்தர்.சி. இயக்கத்தில், நான் நடித்த மதகஜராஜா, படம் இன்னும் ரிலீஸ் ஆகாதது, மனதில் மிகப்பெரிய வலியை ஏற்படுத்தியிருந்தது. அப்போதே, சுந்தர். சி. இயக்கத்திலான அடுத்த படத்தை, பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என்று அப்போதே திட்டம் தீட்டினேன். தற்போது வெற்றியும் பெற்றுவிட்டேன். மனதிற்கு மிகுந்த சந்தோஷமாக உள்ளது. ஆம்பள படமும், பெரிய ஹிட்டாகியுள்ளது. படத்தை, 3 மாதங்களில் எடுத்து முடித்துள்ளோம்..
எவனா இருந்தாலும் வெட்டுவேன் என்று நான் சொன்னதாக ஆர்யா, சமீபத்தில் கூறியிருந்தார். நான் அப்படி கூறவேயில்லை. பொங்கல் பண்டிகைக்கு, எந்த படம் வருகிறது என்பது கூட அப்போது எனக்கு தெரியாது. அதேபோல், விஷ்ணுவும், எனக்கும், நடிகை லட்சுமி மேனனுக்கும் காதல் என்று கூறியிருப்பதாக பத்திரிகையில் செய்தி படித்தேன். இது மனதிற்கு மிகுந்த வருத்தமாக இருந்தது. இனிமேல், என் பட விழாக்களுக்கு, நண்பர்களுக்கு அழைப்பு விடுக்கப்போவதில்லை.
ஐ, ஆம்பள, டார்லிங் போன்ற படங்களின் திருட்டு விசிடிக்கள், தற்போது என் கையில் உள்ளன. தியேட்டரில் முன்சீட்டில் இருந்து படம் எடுத்திருக்கின்றனர்., பிரிண்ட் சரியாக இல்லை. திருட்டு விசிடிக்கு எதிரான போராட்டத்தில் இதுவே நாம் பாதி வெற்றி பெற்றதற்கு சமம். திருட்டு விசிடியை விரைவில் முழுவதுமாக ஒழிப்போம்.