Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பீகே படத்தை எதிர்த்த மனு தள்ளுபடி:சகிப்புத்தன்மை வேண்டும் என்கிறது டில்லி ஐகோர்ட்

19 ஜன, 2015 - 16:44 IST
எழுத்தின் அளவு:

சமுதாயத்தில், சகிப்புத்தன்மை இல்லாமல் இருப்பது ஆபத்தானது. இதுபோன்ற நடவடிக்கைகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என கூறி, பீகே படத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை, டில்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.


பாலிவுட் நடிகர் அமீர் கான், அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து நடித்த, பீகே என்ற படம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது. இந்த படத்தில், இந்து மதத்துக்கு எதிரான காட்சிகள், வசனங்கள் இடம் பெற்றுள்ளதாகக் கூறி, படத்துக்கு தடை விதிக்கும்படி, டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரோகிணி தலைமையிலான, பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:


சமீபகாலமாக, நம் நாட்டின் மதம் தொடர்பான விஷயங்களில், மக்களிடையே சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது. குறிப்பிட்ட சில விஷயங்களில் சகிப்புத்தன்மை அவசியம். சகிப்புத்தன்மை இல்லாமல் இருப்பது ஆபத்தான போக்கு. இதுபோன்ற நடைமுறையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இல்லையெனில், காட்டுத்தீ போல பரவி, நாட்டுக்கு பெரும் ஆபத்து ஏற்படும்.


இந்த மனு கூட, சகிப்புத்தன்மை இன்றி தான், தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் நடக்கும் உண்மையான விஷயங்களை, கலைஞர்கள் திரையில் பிரதிபலிப்பதற்கு நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் உரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஒரு படத்தைப் பார்ப்பதும், பார்க்காமல் இருப்பதும், தனிப்பட்ட நபரின் உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது. கட்டாயமாக படம் பார்க்கும் படி, யாரும், யாரையும் வற்புறுத்தவில்லை.


இந்த படம், சர்வதேச அளவில், 600 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது. இதன் மூலம், இந்த படத்துக்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது உறுதியாகியுள்ளது.


சமூகத்தில் நடக்கும் மோசமான சம்பவங்களைத் தடுப்பது குறித்து தான், இந்த படத்தின் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகளை வெட்டவோ அல்லது இந்த படத்தை வெளியிடத் தடையோ விதிக்க முடியாது. இவ்வாறு, உத்தரவிட்ட நீதிபதிகள், பீகே படத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in