தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமுதாயத்தில், சகிப்புத்தன்மை இல்லாமல் இருப்பது ஆபத்தானது. இதுபோன்ற நடவடிக்கைகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என கூறி, பீகே படத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை, டில்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
பாலிவுட் நடிகர் அமீர் கான், அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து நடித்த, பீகே என்ற படம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது. இந்த படத்தில், இந்து மதத்துக்கு எதிரான காட்சிகள், வசனங்கள் இடம் பெற்றுள்ளதாகக் கூறி, படத்துக்கு தடை விதிக்கும்படி, டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரோகிணி தலைமையிலான, பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:
சமீபகாலமாக, நம் நாட்டின் மதம் தொடர்பான விஷயங்களில், மக்களிடையே சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது. குறிப்பிட்ட சில விஷயங்களில் சகிப்புத்தன்மை அவசியம். சகிப்புத்தன்மை இல்லாமல் இருப்பது ஆபத்தான போக்கு. இதுபோன்ற நடைமுறையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இல்லையெனில், காட்டுத்தீ போல பரவி, நாட்டுக்கு பெரும் ஆபத்து ஏற்படும்.
இந்த மனு கூட, சகிப்புத்தன்மை இன்றி தான், தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் நடக்கும் உண்மையான விஷயங்களை, கலைஞர்கள் திரையில் பிரதிபலிப்பதற்கு நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் உரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஒரு படத்தைப் பார்ப்பதும், பார்க்காமல் இருப்பதும், தனிப்பட்ட நபரின் உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது. கட்டாயமாக படம் பார்க்கும் படி, யாரும், யாரையும் வற்புறுத்தவில்லை.
இந்த படம், சர்வதேச அளவில், 600 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது. இதன் மூலம், இந்த படத்துக்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது உறுதியாகியுள்ளது.