தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கமலஹாசன், நம்ப முடியாத அளவிற்கு வியப்பிற்குரியவர் என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார். ஊடகங்களுடனான தொடர்பை முதலில் இருந்தே தவிர்த்து வந்த இளையராஜா, சமீபத்தில், ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்தார். அதில் அவர் அமிதாப், ரஜினி, கமல் உள்ளிட்டோர்களுடன் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
கமலஹாசன் குறித்து இளையராஜா கூறுகையில்... கமலஹாசன் மிகச் சிறந்த பாடகர். அருமையான குரல் வளம் கொண்டவர். ஒரு காட்சியாகட்டும், இசையாகட்டும், அதை உள்வாங்கிக் கொள்ளும் அபாரமான திறனை பெற்றவர். செட்டில் இயக்குநர் காட்சிகள் அமைத்துக் கொண்டிருக்கும்போது, இவர் ஜோக்கடித்துக் கொண்டிருப்பார். ஆனால் தன் ஷாட் வந்ததும் இயக்குநர் எதிர்பார்த்ததை பூர்த்தி செய்துவிடுவார். அது நம்ப முடியாத அளவுக்கு வியப்பாக இருக்கும்.
அமிதாப் குறித்து கூறுகையில், "அமிதாப் மிகச் சிறந்த கலைஞர். நம்ப முடியாத அளவுக்கு திறமைசாலி. அருமையான மனிதர். அவர் நல்ல பாடகரும் கூட. அவருக்காக நான் பாடல் உருவாக்கும் முன்பே, அவர் பாடியதைக் கேட்டிருக்கிறேன். மிகச் சிறப்பாக, தன் ஸ்ருதியில் சரியாகப் பாடுபவர் அமிதாப். அதை மனதில் வைத்துதான் ஷமிதாப்பில் பிட்லி.. பாடலை உருவாக்கிறேன். அவரும் அவரும் அருமையாகப் பாடினார்.