‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
'ரேடியோ மிர்ச்சி' பண்பலை வானொலியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக தன் கேரியரைத் தொடங்கியவர் சிவா. ஆர்ஜேவாக புகழ்பெற்ற சிவா வெங்கட்பிரபு இயக்கிய 'சென்னை 28' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு சரோஜா, தமிழ்ப்படம், பதினாறு, வ, கலகலப்பு, தில்லு முல்லு, சொன்னா புரியாது, யா யா, வணக்கம் சென்னை என அரை டஜனுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். 2013 ல் வெளிவந்த வணக்கம் சென்னை படத்தை உதயநிதியில் மனைவி கிருத்திகா இயக்கினார்.
இந்தப் படத்திற்குப் பிறகு மிர்ச்சி சிவாவின் நடிப்பில் வேறு படங்கள் எதுவும் வெளிவரவில்லை. அவர் நடித்த படங்கள் வரிசையாக தோல்வியடைந்ததினால் சிவாவுக்கு மார்க்கெட் போய்விட்டது. அதனால் மீண்டும் ரேடியோ மிர்ச்சியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்துவிட்டார் என்ற பேச்சு படத்துறையில் பலமாக அடிபட்டு வருகிறது. உண்மையில், சத்தமில்லாமல் ஒரு படத்தை இயக்கும் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார் சிவா.
பாபி சிம்ஹா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஆடாம ஜெயிச்சோமடா படத்திற்கு வசனம் எழுதிய சிவா, கடந்த சில மாதங்களாக தான் இயக்க உள்ள படத்துக்கு திரைக்கதை எழுதும் வேலையை கவனித்து வருகிறார். இரண்டு கதைகளை கையில் வைத்திருக்கும் சிவா, ஒரு கதைக்கு காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு என பெயர் வைத்திருக்கிறார். இன்னொன்று குடும்பப்படத்திற்கான கதையாம். இக்கதைக்கு எஸ்.பி.பி. போன்ற ஒருவரை கதாநாயகனாக்க வேண்டும் என மனதில் நினைத்திருக்கிறாராம் சிவா. திரைக்கதைகளை எழுதி முடித்த கையோடு தான் இயக்க உள்ள படத்தை தொடங்க திட்டமிட்டிருக்கிறாராம்.
இதற்கிடையில், திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சி.வி.குமாரின் நண்பர் மணிகண்டன் இயக்கும் '144' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.