பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
கர்நாடக இசை பாடகிகளுள் முன்னணியில் உள்ள சுதா ரகுநாதன், வசந்த் இயக்கத்தில் வெளியாகும் படத்தின் மூலம், இசையமைப்பாளர் அவதாரம் எடுக்கிறார்.
இயக்குனர் வசந்த் இயக்கும் புதிய படத்தின் தலைப்பு 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்'. அன்றாட வாழ்வில் ஒரு பெண் சந்திக்கும் பிரச்சினைகளை உள்ளடக்கிய படமாக தயாராகிறது. இப்படத்தில் பத்மபிரியா மற்றும் கருணாகரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் மூலம் பிரபல கர்நாடக சங்கீத பாடகி சுதா ரகுநாதன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
பத்மபிரியா, வசந்துடன் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படம் இதுவாகும். ஏற்கெனவே, வசந்த் இயக்கத்தில் 'சத்தம் போடாதே' என்ற படத்தில் பத்மபிரியா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.