ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இந்திய சினிமாவில் மிக முக்கிய ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் பி.சி.ஸ்ரீராம். பூவே பூச்சூடவா, மவுன ராகம், அக்னி நட்சத்திரம், அபூர்வ சகோதரர்கள் என பல தமிழ் படங்களை தன் ஒளிப்பதிவால் வசீகரித்தவர், இந்தியில் பா, இஷாக், தற்போது ஷமிதாப் என அங்கேயும் தனி முத்திரை பதித்தவர். நாயகன் படத்திற்காக தேசிய விருது பெற்றவர். தற்போது ஐ படத்தில் அவரது ஒளிப்பதிவு பேசப்படுகிறது. தமிழ் சினிமாவில் பிலிமில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட கடைசி படம் ஐ. அதைச் செய்தவர் பி.சி.ஸ்ரீராம்.
திறமையான ஒளிப்பதிவாளர்கள் இயக்குனர்களாக மாறுவது காலம் காலமாக நடந்து வருகிறது. கர்ணன், பாலுமகேந்திரா, கே.வி.ஆனந்த், சந்தோஷ் சிவன், ராஜீவ் மேனன், வேல்ராஜ் என இந்த பட்டியல் நீளமானது. அந்த வரிசையில் பி.சி.ஸ்ரீராமும் படம் இயக்கினார். 1992ல் மீரா படத்தை இயக்கினார். அதன்றபிறகு கமலஹாசனின் வேண்டுகோளுக்கிணங்க குருதிப்புனலை இயக்கினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு வானம் வசப்படும் என்ற படத்தை இயக்கினார். டிஜிட்டலில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட இரண்டாவது படம் இது (முதல் படம் மும்பை எக்ஸ்பிரஸ்).