அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி படங்களை இயக்கிய சரவணன் தற்போது ஜெய்-ஆண்ட்ரியா நடிப்பில் இயக்கியுள்ள படம் வலியவன். இந்த படத்தில் பாக்சிங் வீரராக நடிக்கிறார் ஜெய். அதனால் தனது பாடிலாங்குவேஜை மாற்றி நடித்துள்ள ஜெய், இந்த படம் எதிர்காலத்தில்தான் ஆக்சன் ஹீரோ ஆவதற்கு அடித்தளமாக அமையும் என்று எதிர்பார்க்கிறார். மேலும், இவன் வேற மாதிரி படத்திற்கு ஹீரோயினி தேடியபோது கிட்டத்தட்ட 400 நடிகைகளை தேடி கடைசியாக டெல்லி அழகி சுரபியை ஓகே செய்த சரவணன், இந்த வலியவன் படத்திற்காகவும் மாதக்கணக்கில் ஹீரோயினி தேடினாராம். கடைசியாகத்தான், எதற்கு புதுமுகத்தை நடிக்க வைத்து ரிஸ்க் எடுக்க வேண்டும். ஒரு பிரபல நடிகையையே நடிக்க வைக்கலாமே என்றபோதுதான் ஆண்ட்ரியா அவர் மனதில் வந்து நின்றாராம். ஆனால், கூடவே ஆண்ட்ரியாவை நினைத்து அவரது மனதில் ஒருவித பயமும் வந்ததாம். அது என்ன பயம்? என்று கேட்டால், அவர் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் கெளதம்மேனனின் இயக்கத்தில் அறிமுகமானவர். அதையடுத்து, விஸ்வரூபம் படத்தில் கமல் போன்ற பெரிய நடிகர்களுடனெல்லாம் நடித்திருக்கிறார். அதனால் நமக்கு சரிப்பட்டு வருவாரா? என்பதுதான் அந்த பயத்தின் அர்த்தமாம். இருப்பினும் அவரை அழைத்து பேசிதான் பார்ப்போமே என்று ஆண்ட்ரியாவுடன் சந்திப்பு நடத்தினாராம். ஆனால் அவரோ இவர் எதிர்பார்த்ததற்கு மாறாக, ரொம்ப இயல்பாக எளிமையாக பழகினாராம். இவர் எப்படி சொன்னாலும் அப்படியெல்லாம் நடிப்பதற்கு தயாராக இருந்தாராம். பின்னர், படப்பிடிபபு தளத்துக்கு வந்தபோதும் எந்தவித டென்சனையும் கொடுக்காமல் ஒவ்வொரு காட்சியையும் எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடித்துக்கொடுத்து கைதட்டல் பெற்றாராம் ஆண்ட்ரியா. விளைவு, என் படங்களில் இதுவரை நடித்த நடிகைகளில் ஆண்ட்ரியாதான் பெஸ்ட் என்று வாயார புகழ்ந்து தள்ளி வருகிறார் சரவணன். இதனால் அவரைப்போலவே ஆண்ட்ரியா நமக்கெல்லாம் செட்டாக மாட்டார் என்று நினைத்து விலகி நின்ற மேலும் சில கோலிவுட் டைரகடர்களும் இப்போது ஆண்ட்ரியாவை சந்தித்து கதை சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.