அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
கும்கி நாயகன் விக்ரம்பிரபுவுக்கு அதன்பிறகு நடித்த இவன் வேற மாதிரி படம் எதிர்பார்த்த மாதிரி ஹிட்டாக அமையவில்லை. இருப்பினும் ஓகே என்ற பெயரை எடுத்தது. அதனால் தடுக்கி விழ இருந்த விக்ரம்பிரபு சுதாரித்துக்கொண்டார். அதையடுத்து அவர் நடித்த அரிமா நம்பி, சிகரம்தொடு, வெள்ளைக்கார துரை ஆகிய படங்கள் அடுத்தடுத்து அவருக்கு வெற்றிப்படிக்கட்டுகளாக அமைந்தன.
அதனால், தற்போது மிகுந்த சந்தோசத்தில் காணப்படுகிறார் விக்ரம்பிரபு. அதேசமயம் இந்த வெற்றியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதிலும கவனமாக இருக்கிறார். அதனால் எடுத்தோம் கவுத்தோம் என்று எந்த கதைகளை அவர் ஓ.கே செய்வதில்லை. ஒனறுக்கு மூன்று தடவை கேட்கிறார். முதலில் அப்பா பிரபு கேட்கிறார். அதையடுத்து இவர் கேட்கிறார். பிறகு இருவருமே அமர்ந்து இதில் எந்த கதையை ஓ.கே செய்யலாம் எனறு ஆலோசிக்கிறார்கள். அதன்பிறகுதான் தேர்வு செய்யும் கதையின் டைரக்டரை அழைத்து நடிப்பதற்கான வாக்குறுதியை வழங்குகிறார்கள்.
அந்த வகையில், தற்போது தலப்பாக்கடடு, இது என்ன மாயம் என்ற இரண்டு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த இரண்டு படங்களிலுமே வெள்ளைக்காரதுரை படத்தைப்போலவே காமெடியையும் கலந்து நடிக்கிறாராம் விக்ரம் பிரபு. காரணம், வெள்ளைக்கார துரை ஏ சென்டர்களில் கவுத்து விட்டபோதும், பி அண்ட் சியில்தான் சூடு பிடித்தது. அதனால் இப்போது அவரது டார்க்கெட் பி அண்ட் சி சென்டர் ரசிகர்கள்தானாம். ஆக, மினிமம் கியாரண்டி ரூட்டை கேட்ச் பண்ணி விட்டார் விக்ரம்பிரபு.