திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
தமிழ் சினிமாவின் முக்கியமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஜே.எஸ்.கே பிலிம் கார்பரேஷன். பசுபதி கேர் ஆஃப் ராசாக்காபாளையம், வேலுபிரபாகரனின் காதல் கதை, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், ஆரோகணம், பரதேசி, தங்க மீன்கள், இதற்குத் தானே ஆசைப்படாய் பாலகுமாரா, ரம்மி, மதயானைக்கூட்டம், ஒரு கன்னியும் மூணு களவாணிகளும், படங்களை தயாரித்தது. அல்லது தயாரித்தவர்களிடமிருந்து வாங்கியது. தற்போது நாலு போலீசும் நல்ல இருந்த ஊரும், குற்றம் கடிதல், அண்டாவ காணோம், படங்களை தயாரித்து வருகிறது.
தற்போது இந்த நிறுவனம் தங்களது படங்களை யூ டியூப், கூகுள் ப்ளே, ஐ டியூன் ஆகியவற்றில் வெளியிட இருக்கிறது. "ஒரு படம் திரையரங்கை விட்டு வெளியே வந்துவிட்டால் மக்கள் அந்தப்ப படத்தை திருட்டு விசிடியிலோ, அல்லது திருட்டுத்தனமாக டவுண்லோட் செய்தோ, அல்லது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வரை காத்திருந்தோதான் பார்க்க வேண்டும். இந்த நிலையை மாற்றி அமைக்க படம் தியேட்டரை விட்டு வந்ததும் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் முறைப்படி மக்களுக்கு கொண்டு சேர்க்க இருக்கிறோம். புதுபடங்களின் ஆடியோவையும் அவ்வாறு வெளியிட இருக்கிறோம். 17ந் தேதி முதல் வேலுபிரபாகரனின் காதல் கதை படத்தையும், நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் படத்தின் ஆடியோவையும் வெளியிடுகிறோம். பின்னர் எங்கள் மற்ற படங்களையும் முறைப்படி அறிவித்து வெளியிட இருக்கிறோம். https://www.youtube.com/JSKFilmCorp: என்ற யூ டியூப் லிங்கில் எங்கள் படங்களை காணலாம். இவ்வாறு ஜே.எஸ்.கே நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.