‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
சமீபகாலமாக இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் என பலரும் ஹீரோக்களாகி வருகின்றனர். அந்த வகையில், பாடலாசிரியர் பா.விஜய் ஞாபகங்கள், இளைஞன் படங்களை அடுத்து இப்போது தகடு தகடு என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து யோகி படத்தில் நடிகரான பாடலாசிரியர் சினேகன் பின்னர் 420 என்ற படத்தில் நாயகனாக நடித்தார். அதையடுத்து ராஜராஜ சோழனின் போர்வாள் என்ற படத்தில் இப்போது ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த வரிசையில், தற்போது வளர்ந்து வரும் பாடலாசிரியரான ஜெயங்கொண்டானும் அரிதாரம் பூச தயாராகி விட்டார். பல படங்களில் பாடல்கள் எழுதி வரும் இவருக்கு, ஏற்கனவே அனேகன் உள்ளிட்ட சில படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்ததாம். ஆனால் அப்போது நடிப்பில் போதிய ஆர்வம் இல்லாமல் இருந்த அவர் அந்த வாய்ப்புகளை ஏற்க மறுத்து விட்டாராம்.
ஆனால்,. தொடர்ந்து சில டைரக்டர்கள் நடிக்க வலியுறுத்தியதை அடுத்து இப்போது, நம்மை தேடி வரும் வாய்ப்புகளை எதற்காக மறுக்க வேண்டும் என்று அரிதாரம் பூச தயாராகி விட்டார் ஜெயங்கொண்டான்.