பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
அருந்ததியைத் தொடர்ந்து அனுஷ்கா நடித்துள்ள பிரமாண்ட படம் ராணி ருத்ரம்மா தேவி. தமிழ்நாட்டு ஜான்சிராணி போன்று ஆந்திராவில் ராணியாக வாழ்ந்தவர்தான் இந்த ருத்ரம்மா தேவி. அவரது வாழ்க்கை கதை என்பதால், அவரைப்போன்ற கெட்டப்புக்கு மாறி நடித்துள்ளார் அனுஷ்கா. முக்கியமாக குதிரையேற்றம், வாள் சண்டை என்றெல்லாம் புகுந்து விளையாடியிருக்கிறார்.
இந்த நிலையில், தமிழில் விஜய் நடித்து வரும் புலி படத்துக்காக இளவரசி ரோலில் நடிக்கிறார் ஹன்சிகா. இந்த வேடத்தில் அவருக்கு வாள் சண்டை போடும் காட்சிகளும் உள்ளதாம். அதனால் ஒரு பயிற்சியாளரை வைத்து சில நாட்கள் தீவிரமான பயிற்சி எடுத்தாராம். அப்போது, அந்த வாளை தூக்கவே ரொம்ப கஷ்டப்பட்டாராம் ஹன்சிகா.
அதோடு, அதை கையில் பிடித்து சுழற்றியபடி பயிற்சி எடுத்தபோது அவரது கை விரல்கள், மணிக்கட்டு போன்ற பகுதிகளில் அதிக வலி ஏற்பட்டதாம். இதனால் முதல் நாள் பயிற்சிக்கு பிறகு இரண்டு நாள் லீவு போட்டு விட்டாராம் ஹன்சிகா. ஆக, பயிற்சியே அவருக்கு பெரிய விஷப்பரீட்சையாக இருந்திருக்கிறது.