ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
புலியைப்பார்த்து பூனை சூடுபோட்டுக் கொண்ட கதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நடிகர் ஜெய்யின் நடவடிக்கைகளைப் பார்த்தால் இந்தக்கதைதான் நினைவுக்கு வருகிறது. தான் நடித்த படங்கள் வெளியாகும்போது அப்படங்களின் புரமோஷனுக்காக பேட்டிகள் தருவதில்லை, தன் படத்தின் இசைவெளியீடு மற்றும் பிரஸ்மீட் எதிலும் கலந்து கொள்வதில்லை என்பதை கொள்கையாக வைத்து அவற்றை கடைபிடித்தும் வருகிறார் அஜித். என் படங்கள் நன்றாக இருந்தால் ஓடப்போகிறது என்று நினைப்பார். அப்படியும் அஜித் நடித்த படங்களுக்கு மிகப்பெரிய ஓப்பனிங் உள்ளது. வசூல் ரீதியிலும் அஜித்தின் படங்கள் முன்னிலையில் இருக்கின்றன.
இந்நிலையில், அஜித் வழியை நடிகர் ஜெய்யும் பின்பற்றி வருகிறார். தன்னுடைய படங்களின் விளம்பரப்படுத்தும் பணிகள் என எதிலும் அவர் கலந்து கொள்வதில்லை. இதனால் அவரை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் ஜெய்க்கும் இடையே பனிப்போர் நடைபெற்றுள்ளது.
"அஜித் படத்துக்கு பேட்டிகள் என எதுவும் கொடுக்கிறாரா? அவருடைய படங்கள் கோடி கோடியாக வசூல் ஆகிறது. பிறகு நான் மட்டும் ஏன் பேட்டிகள் எல்லாம் கொடுக்க வேண்டும்?" என்று ஒரு தயாரிப்பாளரிடம் நக்கலாக கேட்டிருக்கிறார் ஜெய். "அஜித்தின் மார்க்கெட் என்ன உங்களுடைய மார்க்கெட் என்ன? இது தெரியாமல் உங்களை அஜித்துடன் ஒப்பிட்டு பேசுவது தப்பு" என்று தகராறு செய்திருக்கிறார் அந்த தயாரிப்பாளர்..
ஜெய்யின் இந்த முடிவு, தற்போது படங்கள் தயாரித்து வரும் பல தயாரிப்பாளர்களிடையே கடும் அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது.
தயாரிப்பாளர்கள் சங்கத்தில் விரைவில் ஜெய் மீது புகார் கொடுக்க உள்ளனர்.