இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கத்தி படத்தை இயக்கிய பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து இயக்கும் படம் எது என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்திருக்கிறது. கத்தி வெற்றியடைந்ததை வைத்து மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்கினால் மிகப்பெரிய தொகைக்கு அந்தப் படத்தை பிசினஸ் பண்ண முடியும் என்று கணக்குப்போட்டார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்த கணக்கின் அடிப்படையில், விஜய்யிடம் கால்ஷீட் கேட்ட ஏ.ஆர்.முருகதாஸ், அந்தப்படத்தை தானே தயாரிக்க விரும்புவதாகவும் சொன்னார்.
ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் நடித்தால் தான் கேட்கும் சம்பளத்தை கேட்க முடியாது, அப்படியே கேட்டாலும் வெற்றிப்படம் கொடுத்த என்னிடமே இவ்வளவு கேட்கலாமா என்ற கேள்வி எழும் என்பதால் உஷாராகிவிட்டார் விஜய். அதாவது ஏற்கனவே சில தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கி இருப்பதாகவும் அதனால் உடனடியாய் உங்களுக்கு கால்ஷீட் கொடுத்தால் அனாவசியமான பிரச்சனைகள் வரும் என்று காரணம் சொல்லி ஏ.ஆர்.முருகதாஸை அவாய்ட் பண்ணிவிட்டார் விஜய்.
எனவே மௌனகுரு படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் வேலையில் இறங்கினார். சோனாக்ஷியின் கால்ஷீட்டில் குளறுபடி ஏற்பட்டதால் அந்த ப்ராஜக்ட் திட்டமிட்டபடி நடக்கவில்லை. எனவே அடுத்து தமிழ்ப்படம் இயக்குவது என்ற முடிவுக்கு வந்துவிட்டார் ஏ.ஆர்.முருகதாஸ். தற்போது தன்னுடைய பேனரில் விக்ரமை வைத்து விஜய்மில்டன் இயக்கத்தில் 10 எண்றதுக்குள்ளே படத்தை தயாரித்து வருகிறார். எனவே விக்ரமிடம் பேசி தான் இயக்கும் படத்துக்கும் கால்ஷீட் வாங்கிவிட்டார். 10 எண்றதுக்குள்ளே படம் ரிலீஸ் ஆனதும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் துவங்க இருக்கிறது.