நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… |
தன் மீது விழுந்துள்ள ஆபாச முத்திரையை அழித்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன் சாமி இயக்கியுள்ள படம்தான் கங்காரு. இந்த படத்தில் அர்ஜூனா என்ற மலையாள நடிகரை ஹீரோவாக நடிக்க வைத்துள்ளார். படத்தின் பிரதான கதாபாத்திரமான அண்ணன் ரோலில் அவர் நடிக்க, தங்கை ரோலில் பிரியங்கா நடித்திருக்கிறார்.
அண்ணன்-தங்கையிடையே நடக்கும் பாசப்போராட்டங்களை கதை பண்ணியிருப்பதாக சொல்லும் சாமி, அர்ஜூனா மாடர்னாக இருந்தபோதும் அவரது கெட்டப்பை மாற்றுகிறேன் என்று சொல்லி, ஏற்கனவே தனது மிருகம் படத்தில் ஆதி நடித்தது போன்ற கெட்டப்புக்கே மாற்றியிருக்கிறார். இந்த விசயம் அர்ஜூனாவுக்கு தெரியாதபோதும், அர்ஜூனாவின் சென்னை நண்பர்கள் சிலர், மிருகம் ஆதி போன்று அவரை மாற்றியிருப்பதாக சொன்னார்களாம்.
அதையடுத்துதான், மிருகம் படத்தை அவசரகதியில் பார்த்திருக்கிறார் அர்ஜூனா. அப்போதுதான், டைரக்டர் சாமியை பாதித்து கதாபாத்திரங்கள் அனைத்தும் இன்னும அவருக்குள் பதிந்திருக்கின்றன. அதனால்தான் தன்னையும் பழைய சாயலிலேயே மாற்றியிருக்கிறார் என்பதை புரிந்திருக்கிறார். இருப்பினும், கெட்டப் மிருகம் ஆதி மாதிரி இருந்தாலும் எனது கேரக்டர் இந்த படத்தில் வித்தியாசமானது. தங்கைக்காக உயிரையே கொடுக்கும் ஒரு உயர்ந்த அண்ணன் கதாபாத்திரம். அதனால் அந்த நடிப்புக்கு முன்னால் கெட்டப் காணாமல் போய்விடும் எனது கேரக்டர்தான் நிற்கும் என்று நட்பு வட்டாரங்களிடம் கூறி தன்னை தேற்றிக்கொண்டு வருகிறார் அர்ஜூனா.