மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சேவை மனப்பான்மை என்பது எல்லோருக்கும் வந்து விடுவதில்லை. அதிலும் சினிமாவில் ஜெயித்து விட்டவர்கள் அடுத்தடுத்து என்ன பண்ணலாம் என்பது பற்றி மட்டும்தான் பெரும்பாலும் யோசிப்பார்கள். ஆனால் சூதுகவ்வும், ஜிகர்தண்டா படங்களை இயக்கி விட்டு இப்போது இறைவி படத்தை இயக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ள கார்த்திக் சுப்புராஜ் அதிக சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.
அதாவது, சினிமாவில் தான் வாய்ப்பு தேடிய காலகட்டத்தில் எங்கே யாரை எப்படி சந்திப்பது என்பது தெரியாமல் அவர் ரொம்பவே அவதிப்பட்டிருக்கிறாராம். அதனால் தனது நிலையை தனக்கு பிறகு வரும் கலைஞர்களுக்கு வரக்கூடாது என்பதற்காகவே ஒரு நிறுவனத்தை தொடங்கியிருக்கும் அவர் அதற்காக சினிமாக்காரன் என்றொரு ஆல்பத்தையும் தயார் பண்ணியுள்ளர்.
கலைஞர்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக, ஒரு வழிகாட்டும் நிறுவனமாக சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய அவர், அப்படி தன்னை சந்திக்க வருபவர்களை பல தடைகளை தாண்டி வந்து தன்னை சந்திப்பது போல் செய்யாமல், யார் எப்போது வேண்டுமானாலும் தன்னை சந்திக்கலாம் பேசலாம் என்று எளிமையான சூழலை உருவாக்கியிருக்கிறார். இதனால் சினிமாவில் சாதிக்க விரும்புவோர், தங்களுக்கு தேவைப்படும் ஆலோசனைகளை கார்த்திக் சுப்புராஜே சந்தித்து பயனடைந்து வருகிறார்கள்.
மேலும், இந்த வழிகாட்டுதலுக்காக யாரிடமும் அவர் எந்த பலனையும் எதிர்பார்ப்பதில்லையாம். சேவை மனநிலையுடன் செய்து வருகிறார். அதனால் இணையதளம் மூலம் சினிமாவில் நடிக்க விரும்புவோர், டைரக்ஷன் செய்ய விரும்புவோர், இன்னும் இதர டெக்னீஷியன்களும் கார்த்திக் சுப்புராஜிடம் ஆலோசனை பெறுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.