பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மாப்பிள்ளை படத்தில் தனுசுடன் நடித்தபடி கோலிவுட்டுக்கு வந்த ஹன்சிகா, ஆரம்பத்தில் ஹீரோக்களுடன் எப்படி நட்பு வளர்ப்பது என்பது தெரியாமல்தான் இருந்தார். ஸ்பாட்டில் தன்னருகே ஹீரோக்கள் அமர்ந்தாலும், அவர்களிடம் பேசாமல் செல்போனில் கேம் விளையாடியே பொழுதை கழித்து வந்தார்.
அப்படியே யாராவது ஏதாவது பேச்சுக்கொடுத்தால், அம்மாவை கைகாட்டி விட்டு விட்டு தான் கழண்டு கொள்வார். ஆனால், சிம்புவுடனான காதலில் விழுந்து எழுந்தபோது, அவர் தெளிவு பெற்றதாக உணர்ந்த அவரது தாய்குலம் அதன்பிறகு படப்பிடிப்பு தளங்களுக்கு அவருடன் வருவதில்லை. பல சமயங்களில் மும்பையிலேயே முகாமிட்டிருந்தார்.
இதனால், தனது சகோதரனுடன் ஸ்பாட்டுக்கு வரத் தொடங்கிய ஹன்சிகா, அம்மா இல்லாததால மற்றவர்கள் கேட்கும கேள்விகளுக்கு தான் பதில் சொல்லத் தொடங்கியவர், உடன் நடிக்கும் ஹீரோக்களிடமும் அரட்டை அரங்கத்தை ஆரம்பித்தார். குறிப்பாக, எங்கேயும் காதல் படத்தில் நடித்தபோது ஜெயம்ரவியுடன் நட்பு வளர்க்காத ஹன்சிகா, இப்போது ரோமியோ ஜூலியட்டில் நடித்தபோது பெஸ்ட் ப்ரண்டாகி விட்டார். அதையடுத்து, சேட்டையில் நடித்தபோது ஆர்யாவுடன் இடைவெளி விட்டு பழகியவர், இப்போது மீகாமனில் நடித்தபோது பின்னி பிணைந்து விட்டார்.
இந்த நிலையில், ஆம்பள படத்தில் நடித்தபோது விஷாலுடனும் நட்பு வளர்த்து விட்டார். விளைவு, எனது பெஸ்ட் ப்ரண்டு பட்டியலில விஷாலுக்கும் ஒரு முக்கிய இடம் உள்ளது என்று கூறும் ஹன்சிகா, உடன்நடிக்கும ஹீரோயின்களை ரொம்பவே மதிக்கிறார் விஷால். அதோடு, கோ ஆர்ட்டிஸ்டின் தேவைகளை உணர்ந்து கொண்டு நடிக்கிறார். அதனால் அவருடன் ஒரு படத்தில் நடித்தால் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்படுகிறது என்று கூறுகிறார் ஹன்சிகா.