அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
சினிமாவில் நடிக்க வந்த பிறகும் படிப்பில் ஒரு காலும், நடிப்பில் இன்னொரு காலுமாகத்தான் இருந்தார் லட்சுமிமேனன். அதோடு, சினிமாவில் வருடத்திற்கு 3 படங்கள் வரை நடித்தபோதுகூட படப்பிடிப்பு தளங்களில் கொஞ்சம் ஓய்வு கிடைத்தாலும், ஒரு ஓரமாக சென்று புத்தகத்தை விரித்து சீரியசாக படித்துக்கொண்டிருந்தார்.
ஆனால், இது ரொம்ப நாள் நீடிக்கவில்லை. பாண்டியநாடு, மஞ்சப்பை என சில படங்கள் கொடுத்த வெற்றி அவருக்கு சினிமா மீதான மோகத்தை அதிகப்படுத்தி விட்டது. அதோடு, விஷால் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்கள் கிடைத்ததால் அடுத்தபடியாக விஜய், அஜீத் என்றுகூட தனது மார்க்கெட் எகிறி விடும் என்று எதிர்பார்க்கத் தொடங்கினார்.
அதன்காரணமாக, படப்பிடிப்பு தளத்துக்கு வந்திறங்கும்போதே புத்தக மூட்டையுடன் வந்தால், இவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் இல்லை என்று முன்னணி ஹீரோக்கள் தன்னை தவிர்ப்பார்கள் என்பதால் சமீபகாலமாக புத்தக மூட்டையுடன் அவர் ஸ்பாட்டுக்கு வருவதில்லை. கார்த்தியுடன் கொம்பன் படத்தில் நடித்தபோது மற்ற நடிகைகளைப்போன்றுதான் வந்தாராம்.
மேலும், இதுவரை படிப்பும், நடிப்பும் எனது இரண்டு கண்கள் மாதிரி என்று வசனம் பேசி வந்த லட்சுமிமேனன், தற்போது இனிமேல் நடிப்புக்குத்தான் முதலிடம் கொடுக்கப்போகிறேன் என்கிறாராம். அவர் இப்படி சொல்வதைக்கேட்டு, கண்கெட்ட பிறகு சூர்யநமஸ்காரம் செய்த கதையாய், மார்க்கெட் சரிந்த பிறகு இவருக்கு ஞானோதயம் பிறநதிருக்கிறது என்கிறார்கள்.